Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயம் ரவி காட்டில் மழை..! தியேட்டர் வசூலே இனி தேவை இல்லையாம்

ஜெயம் ரவி காட்டில் மழை..! தியேட்டர் வசூலே இனி தேவை இல்லையாம்

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் ஜெயம் ரவி காட்டில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழ் சினிமாவிற்கு ஓடிடி ஒரு வரப்பிராசதமாக மாறிக் கொண்டு வருகிறது. ஒரு படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என்றால் அது திரையரங்கு மூலம் கிடைக்கும்.

- Advertisement -

இதனை  நம்பி இருக்க வேண்டிய சூழல் தான் இருந்தது. தற்போது ஓடிடி தொலைக்காட்சி உரிமம் இசை டப்பிங் ரைட்ஸ் என பல வகையில் லாபம் ஈட்ட முடிகிறது. இந்த நிலையில் திரையரங்கம் வசூல் இல்லாமலே படத்தை வெற்றி படமாக தயாரிப்பாளர்கள் கருதும்  சூழலுக்கு தற்போது நிலை வந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு அதிகபட்சம் 20 முதல் 30 கோடி ரூபாய் செலவாகும்.அது திரையரங்க உரிமம் மற்ற விற்பனை என 40 முதல் 50 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர்கள் வருமானத்தை ஈட்டுவார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி மூலம் ஜெயம் ரவி மார்க்கெட் பல மடங்கு அதிகரித்துள்ளது.  திரையரங்கு உரிமம் விற்காமல் சில படங்கள் 65 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிருக்கிறதாம். அதாவது திரையரங்கில் இருந்து ஒரு பைசா கூட வராமல் 65 கோடி ரூபாய் வருமானத்தில் அவருடைய படம் பெற்று இருக்கிறது.

இதன் காரணமாக ஜெயம் ரவியின் சம்பளம் அதிகரிக்க உள்ளது. மேலும் ஜெயம் ரவி தற்போது பெரிய தயாரிப்பாளர்களும் இணைந்து படத்தின் நடிக்க உள்ளதால் திரையரங்கு உரிமம் எல்லாம்  100 கோடி ரூபாய் என்ற மைல் கல்லை அவர் அடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக தனி ஒருவன் 2 இந்த சாதனையை படைக்கும் என கோலிவுட்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular