Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யாவுடன் இரும்புக்கை மாயவி.. நடிகர் சதீஷ் தந்த அப்டேட்

சூர்யாவுடன் இரும்புக்கை மாயவி.. நடிகர் சதீஷ் தந்த அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை முடித்தவுடன் நடிகர் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்தை எடுக்க இருந்தார். ஆனால் அது சில காரணங்களால் தடைப்பட்டு போனது.

- Advertisement -

அறிவியல் மையமாக வைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். ஆனால் அப்போதுதான் அவருக்கு கைதி படம் ஓகே ஆனது. இதன் பிறகு மாஸ்டர், விக்ரம் என அவருடைய திரைப்பட வாழ்க்கையில் வேற லெவலுக்கு சென்று விட்டது.

- Advertisement -

தற்போது நடிகர் விஜய் வைத்து லோகேஷ் கனகராஜ் லியோ என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். அதன் பிறகு கைது 2, விக்ரம் 2 போன்ற படங்களை லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளார். இந்த நிலையில் நடிகர் சதீஷ் அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை எடுத்துள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் இரும்புக்கை மாயாவி படத்தில் தான் நடிக்க வந்ததாகவும் , ஆனால் அந்த படம் எடுக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார். தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க நானும் லோகேஷ் கனகராஜ் சென்றோம்.

அப்போது அவர் இரும்பு கை மாயாவி படத்தை தான் மீண்டும் எடுக்க உள்ளதாகவும் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று தம்மிடம் லோகேஷ் கனகராஜ் கூறினார். தாமும் இதற்கு ஓகே என்று சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் சதீஷ் குமார் தற்போது கதாநாயகனாக  நடிக்க இருப்பதாகவும் , லோகேஷ் கனகராஜ் மற்றும் அந்த கதாபாத்திரத்திற்காகவும் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் இரும்பு கல் மாயாவி திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular