Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாமற்றவர்கள் சொல்கேட்டு 'அந்த' தவறை நானும் செய்தேன்.. மணிஷா கொய்ராலா  ஒபன் டாக்

மற்றவர்கள் சொல்கேட்டு ‘அந்த’ தவறை நானும் செய்தேன்.. மணிஷா கொய்ராலா  ஒபன் டாக்

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய திரைப்படத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக கொடி கட்டி பறந்தவர் தான் மனிஷா கொய்ராலா. பம்பாய் படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் அறிமுகமான மனிஷா கொய்ராலா, இந்தியன், உயிரே,முதல்வன், பாபா போன்ற பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

- Advertisement -

அதன் பின் மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதிலிருந்து வெற்றிகரமாக திரும்பி வந்துள்ள மனிஷா கொய்ராலா, தற்போது சஞ்சய் பன்சாலியின் வெப் சீரிஸில் நடித்த வருகிறார். இது குறித்து பேசிய அவர் திரை உலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. இங்கு பெண்களுக்கு குறைந்த அளவிலே கதாபாத்திரம் கிடைக்கிறது.

- Advertisement -

அப்படி இருந்தாலும் எந்த ஒரு முக்கியத்துவம் இல்லாத பாத்திரமே இருக்கிறது. என் வாழ்க்கையில் பல படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது என்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் சஞ்சய் பன்சாலியின் வெப் சீரிஸ் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

- Advertisement -

நான் என் சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து நடித்து வந்தேன். அப்போது நான் இளம் வயது நடிகையாக இருந்த போது என்னை சுற்றி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிசியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பெறுவீர்கள் என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு நான் இருக்கும் அனைத்து படத்தையும் ஒப்புக்கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். அதில் சில படங்கள் எந்த முக்கியத்துவமும் எனக்கு இல்லாமல் இருந்தது. இதில் சில படங்கள் தோல்வியையும் தழுவி இருக்கிறது.

இப்போது அதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இந்த படங்களில் நான் நடிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் என் குடும்பத்தினரோடு நேரத்தையாவது செலவழித்திருப்பேன். தற்போது எனக்கு இரண்டுமே கிடைக்கவில்லை. இந்த தவறை இனி நான் செய்ய கூடாது என்று இருக்கிறேன் என மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

Most Popular