Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாதொழில் அதிபராக மாறும் நடிகை நயன்தாரா.. சென்னையில் பிரபல திரையரங்கை வாங்கினார்

தொழில் அதிபராக மாறும் நடிகை நயன்தாரா.. சென்னையில் பிரபல திரையரங்கை வாங்கினார்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தற்போது நயன்தாராவுக்கு 38 வயது ஆகிவிட்டது. மேலும் தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இருக்கிறார்.

- Advertisement -

நயன்தாராவுக்கு கடைசியாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியும் முடிவடைந்தது. இந்த நிலையில் அவர் ஜவான் திரைப்படத்தை தான் மிகவும் பெரிதாக நம்பி இருக்கிறார். இனி நயன்தாரா பெரும் அளவில் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது முன்னணி நடிகர்கள் எல்லாம் திரிஷா போன்ற நடிகையை ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது தொழிலதிபராக வலம் வர உள்ளார். ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நயன்தாரா தொடங்கியிருக்கிறார்.

- Advertisement -

அதன் பிறகு சாய்வாலா என்ற நிறுவனத்தில் நயன்தாரா பல கோடி ரூபாயை முதலீடு செய்தது இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் பிரபல திரையரங்கமான அகஸ்தியாவை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடசென்னை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் அகஸ்தியா திரையரங்கில் ஆயிரம் பேர் அமர்ந்து படத்தை பார்க்கலாம். இந்த நிலையில் இந்தத் திரையரங்கை தனது நண்பர்களுடன் வாங்கி இருக்கும் நயன்தாரா. இதனை இடித்துவிட்டு மல்டிபிளக்ஸ் ஆக மாற்ற முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் திரையரங்கு தொழிலும் நடிகை நயன்தாரா இறங்க உள்ளார். சினிமாவில் பல பேர் புகழ் பணம் என அனைத்தையும் சம்பாதித்த நயன்தாரா இனி தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

சென்னையில் மக்கள் திரையரங்குகளில் அதிக அளவு வந்து பார்ப்பதால் இது போன்ற தியேட்டர்களை நவீன மயமாக்கி ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க நயன்தாரா முடிவெடுத்துள்ளார். இது போன்ற பழைய திரையரங்குகள் எல்லாம் தற்போது சென்னையில் உருமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular