கையில் அரிவாளுடன் அடுத்த அவதாரம் எடுத்துள்ள ஆர்யா… கருப்புச்சட்டை அழுக்கு வேட்டி நெற்றியில் சிவப்பு பொட்டு என அதே முத்தையா ஃபார்முலா… வெறித்தனமாய் காத்திருக்கும் ரசிகர்களுக்கு டீசர் தேதியை அறிவித்த படக்குழு…
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகின.
‘விருமன்’ வெற்றிக்கு முத்தையாவும், ’கேப்டன்’ வெற்றிக்கு பின் ஆர்யாவும் இணையும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவில்பட்டி அருகே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஆர்யா கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டெடி, கேப்டன் ஆகிய படங்கள் ஆர்யாவிற்கு பெரிய வெற்றியை தராததால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. “இந்த உலகத்துல எந்த திசையில தப்பு நடந்தாலும், அந்தத் தப்பை தட்டிக் கேட்க சிங்கம் போல ஒருத்தன் வருவான்” என்னும் பஞ்ச் வசனத்துடன் ஆரம்பிக்கும் டீசரில், வழக்கமான ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளன. “அடிக்கிறது எனக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, போற போக்குல எச்சில் துப்புற மாதிரி துப்பி தூக்கி எறிஞ்சிட்டு போய்கிட்டே இருப்பேன்” என ஆர்யா கூறும் வசனம், சுத்தமாக எடுபடவில்லை என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
