Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாகஸ்டடி கதையை ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு.. செம தில் தான்!

கஸ்டடி கதையை ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு.. செம தில் தான்!

- Advertisement -

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் .இந்த திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். மாநாடு வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கட் பிரபு படத்தின் கதையை தில்லாக கூறினார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த படத்தின் நாயகன் நாக சைதன்யா இயக்குனரின் நடிகராக விளங்கினார். பொதுவாக ஒரு படத்தில் வில்லனை கொல்வதுதான் ஹீரோவின் குறிக்கோளாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் நான் கதையை தலைக்கீழ் மாற்றி உள்ளேன்.

- Advertisement -

வில்லன் சாகக்கூடாது. வில்லனை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஹீரோவின் குறிக்கோளாக இருக்கும். இதுதான் இந்த படத்தின் கதை. வில்லன் மீது அனைத்து கோபமும் ஹீரோக்கு இருக்கும். ஆனால் அவரை பழி வாங்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஹீரோக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு.

இந்த படம் 48 மணி நேரத்தில் நடைபெறும் கதை ஆகும். இந்தப் படத்தில்  டூயட் பாடல்கள் எல்லாம் இல்லை. அது படத்தின் வேகத்தை குறைத்து விடும் என்பதற்காக நாங்கள் அதனை செய்யவில்லை. அடுத்தது என்ன நடக்கும் என படம் வேகமாக திரில்லிங்காக இருக்கும்.

அப்போது பாடலை வைத்தால் அது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனினும் ரசிகர்களுக்காக ஒரு டூயட் பாடலை வைக்க ஒரு இடம் கிடைத்தது. எனினும் நாக சைதன்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் என்ன சொன்னீர்களோ அதை மட்டும் எடுத்துக் கொடுங்கள் ப்ளீஸ் என்று கூறினார். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Most Popular