Thursday, April 18, 2024
- Advertisement -
Homeசினிமாகாரைக்காலில் தங்கி இருக்கும் துல்கர் சல்மான்! தமிழக தாதா கதையில் நடிக்கிறாரா?

காரைக்காலில் தங்கி இருக்கும் துல்கர் சல்மான்! தமிழக தாதா கதையில் நடிக்கிறாரா?

- Advertisement -

நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்ஸ்கள் தற்பொழுது வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்ய லட்சுமி, கோகுல் ,சுரேஷ், பிரசன்னா போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிச்சாய்ஸ் என்று மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பு இவர் தமிழில் சென்னையில் ஒரு நாள், துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இதில் உள்ள பாடல்கள் எதுவும் பெரும் அளவில் பிரபலமாகவில்லை.
தற்பொழுது வந்த தகவலின் படி இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு ஏறத்தாழ 90 நாட்களை நிறைவு பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் இரண்டு வார காலம் படப்பிடிப்பு எடுக்கப்பட உள்ளது என்ற தகவல் வந்திருக்கிறது. மேலும் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காரைக்காலில் எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

நடிகர் துல்கர் சல்மானுக்கு 2021 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட குரூப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியது. இது ஒரு ப்ரோகிரபிகள் கிரைம் திரில்லர் ஃபிலிம் ஆகும். ஏறுத்தாள இதே போன்ற கதைக்களத்தை கொண்டது தான் தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படம். அதனால் இந்த திரைப்படமும் நடிகர் துல்கர் சல்மானுக்கு வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் திரைப்படமும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என்று பழமொழிகளிலும் எதிர்பாராத வெற்றியடைந்தது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குரூப் திரைப்படத்திற்குப் பிறகு ஒரு காதல் கதையை தேர்வு செய்த  துல்கர் சல்மான் மீண்டும் ஒரு ஆக்ஷன் பிரேமில் களம் இறங்கி இருக்கிறார் மேலும் இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஓனம் திருநாள் அன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular