Saturday, April 20, 2024
- Advertisement -
HomeEntertainmentசோகத்தில் காத்திருந்த இயக்குனர் பாண்டிராஜ்… அழைத்துப் பேசி பட வாய்ப்பை வழங்கிய ஜெயம் ரவி… விரைவில்...

சோகத்தில் காத்திருந்த இயக்குனர் பாண்டிராஜ்… அழைத்துப் பேசி பட வாய்ப்பை வழங்கிய ஜெயம் ரவி… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாமியார்தான் தயாரிப்பாம்!

பசங்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இவர், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றார். தொடர்ந்து அருள் நிதியை வைத்து வம்சம் திரைப்படத்தை இயக்கிய பாண்டியராஜ், கிராமத்துக் கதைக்களமும் தனக்கு கை தேர்ந்தது என்பதை நிரூபித்தார். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி படங்களை இயக்கிய பாண்டியராஜுக்கு கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

குடும்ப உறவுகளை விரிவாக எடுத்துக் கூறிய இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் வசூலை வாரி குவித்தது. மேலும் நடிகர் கார்த்திக்கும் குறிப்பிட்டு சொல்லும் படி மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாண்டிராஜ், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தையும் அவர் இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் பாண்டியராஜ் இரண்டாவது முறையாக விஷால் உடன் இணைய இருப்பதாகவும், இதற்கான கதையை அவர் தயார் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அதற்கு முன்பாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டதாகவும், அதற்கு நடிகரிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால் முடிவை ஒத்தி வைத்ததாகவும் கூறப்பட்டது. மேலும் விஷாலுடன் நடத்திய பேச்சு வார்த்தையும் பாண்டிராஜுக்கு கை கூட வில்லை என்ற தகவல் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ரவியின் உறவினரான சுஜாதா விஜயகுமார் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது இறைவன், சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இறைவன் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தொடர்ந்து அவர் இயக்குனர் முத்தையா உடன் இணை இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது திருப்புமுனையாக பாண்டியராஜிடம் சேரப் போவதாக வெளியாய் இருக்கும் தகவல், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Most Popular