விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அவரின் அடுத்த படத்தைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு அப்படத்தை இயக்கவுள்ளார். இந்த செய்தி தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கின்றது. ஏனென்றால் தளபதி 68 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.
இதையடுத்து கோபிசந்த் இல்லை அட்லீ தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது.
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் வரை நடைபெற இருக்கின்றது. எனவே லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு விஜய் தளபதி 68 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாக தளபதி 68 படத்தின் பூஜை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என பேசப்பட்டு வருகின்றது.
இதைத்தொடர்ந்து ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை திரையில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு முழு கதையையும் ரெடி செய்து வருகின்றார். விரைவில் விஜய்யை சந்தித்து முழு கதையையும் கூறவுள்ளார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் வித்யாசமான ஜானரில் இருக்கும் என்றும், அதே சமயத்தில் கமர்ஷியல் படமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக கஸ்டடி படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி நடிகர் இருப்பதாக கூறப்படுகிறது.
கஸ்டடி படம் தோல்வி அடைந்தாலும் அதில் கீர்த்தி ஷெட்டியின் டெடிகேஷனை பார்த்த வெங்கட் பிரபு அவரை தளபதி 68க்கு ஹீரோயினாக முடிவு செய்துவிட்டாராம். கீர்த்தி ஷெட்டி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது
