Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாபுதிய பஞ்சாயத்தில் சிக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கினார்.. விளக்கம் கொடுத்து எஸ்கேப்

புதிய பஞ்சாயத்தில் சிக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கினார்.. விளக்கம் கொடுத்து எஸ்கேப்

தமிழ் சினிமாவில் ஷார்ட் பிலிம் எடுத்து பெரிய இயக்குனர்களாக ஆனவர்கள் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை எடுத்து பிரபலமானார்.

- Advertisement -

இயக்குனர் பிரதீப் ரங்கநாதர் அதனை தொடர்ந்து தாமே நடித்து இயக்கிய லவ் டுடே என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சுமார் 4 கோடி செலவில் உருவான அந்த திரைப்படம் 70 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றது .

இதன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் விளங்கினார். இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் இயக்கி நடித்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய 25 வது திரைப்படம் ஆக தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு எடுக்க உள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்புக்கு பிரதீப் ரங்கநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் அதில் அவர் நடிகர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து தெரிவித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் பெயரை குறிப்பிடாமல் எதற்கு வாழ்த்து சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி ரசிகர்களை மென்டலான் என்று போட்ட போஸ்டுக்கு லைக் போட்டு பிரதீப் ரங்கநாதன் சிக்கினார். மேலும் யுவன் சங்கர் ராஜா விஜய் ஆகியோரை விமர்சித்து போட்டிருந்த பழைய டிவிட்டையும் ரசிகர்கள் தோண்டி எடுத்து அவருக்கு சமூக வலைத்தளத்தில் தர்ம அடி கொடுத்தனர்.

இதிலிருந்து தற்போது தான் அவர் மீண்டு வரும் நிலையில் மீண்டும் விஜய் ரசிகர்களிடம் அவர் மாட்டிக் கொண்டார். ஆனால் இம்முறை பிரச்சனையை பெரியதாக்காமல் உடனே அதனை பிரதீப் ரங்கநாதன் சமாளித்துள்ளார். இது குறித்து ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்துள்ள ரங்கநாதன் தளபதி விஜய் படத்தில் பணியாற்றுவதே மிகப்பெரிய பெருமை தான். அதனால் அவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன்.

தயவுசெய்து என்னுடைய டிவிட்டுக்கு வேறு எந்த கருத்தையும் கற்பிக்காமல் இருங்கள் என கூறியுள்ளார். புலி திரைப்படம் வந்தபோது பிரதீப் ரங்கநாதன் அந்த திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து ட்விட் போட்டு இருந்ததால் அவருக்கு விஜயை பிடிக்காது என ரசிகர்கள் கருத்து தெரிவித்த வந்தனர். தற்போது அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Most Popular