Entertainment

“மணல் மாஃபியா கிங்” சிம்பு படத்தில் நிச்சயம் அரசியல் இருக்கும்.. மனம் திறக்கும் பத்து தல இயக்குனர்!

கெளதம் மேனன், சிம்பு கூட்டணியில் கடந்த ஆண்டு ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. ‘மாநாடு’ படத்தில் வெறித்தனமான கம்பேக் கொடுத்த சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வேறலெவலில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்தது. மேலும், வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார்.

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க கமிட் ஆனார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி முப்தி வெளியானது. இதன் ரீமேக்கை தற்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், மனுஷ்ய புத்திரன், கலையரசன், டிஜே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Advertisement

ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், மணல் மாஃபியா தான் படத்தின் ஒன் லைன் என கூறி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா. இது குறித்து பேசியுள்ள அவர், ஏ ஜி ஆர் எனும் கதாபாத்திரத்தில் மணல் மாஃபியா கிங்காக சிம்பு நடிப்பதாகவும், இந்த படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரிக்க செய்துள்ளதாகவும் கூறினார்.

இயக்குனர் கௌதம் மேனன் தான் தனது குரு எனக் கூறியிருக்கும் இயக்குனர் கிருஷ்ணா, தனது முதல் படமான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு கௌதம் என பெயர் வைத்ததாக கூறினார். முழுக்க முழுக்க மணல் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மணல் கொள்ளையை தடுக்கும் தாசில்தார் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Advertisement

கௌதம் கார்த்திக்கை இதுவரை நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் காட்டியிருப்பதாகவும் அவர் சஸ்பென்சை உடைத்து உள்ளார். சமூக வலைதளங்களில் முக்கிய பிரபலமான கவிஞர் மனுஷன் புத்திரன் இந்த படத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் ஒரு போராளியாக நடித்திருப்பதாகவும் இயக்குனர் மனம் திறந்து உள்ளார். பத்து தல படத்தில் நிச்சயம் அரசியல் இருக்கும் எனக் கூறியிருக்கும் இயக்குனர் கிருஷ்ணா, இதில் சமகாலத்து அரசியலை பேசி இருப்பதாக சொல்லி இருக்கிறார். பத்து தல படம் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top