Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித்துக்காக சிம்பு காட்டிய பெரிய மனசு..! மகிழ் திருமேணியும் கைவிடவில்லை

அஜித்துக்காக சிம்பு காட்டிய பெரிய மனசு..! மகிழ் திருமேணியும் கைவிடவில்லை

நடிகர் சிம்பு 10 தல திரைப்படத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு சென்று கடினமான உடல் பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு ஃபிட்டான ஸ்டைலான சிம்புவாக மீண்டும் தமிழ் சினிமாவை கலக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நடிகர் சிம்புவின் 48வது திரைப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

பத்து தலை திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க தயாராகிவிட்டார் என்ற தகவல் பரவி வந்தது. அந்த தகவலின் படி நடிகர் சிம்பு தன்னுடைய 48வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனியுடன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இதற்கு முன்பு துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் அவருடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்ற இருந்தார். ஆனால் இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இருந்த லைக்கா நிறுவனம் திடீரென்று காரணம் கூறாமல் விக்னேஷ் சிவனை திரைப்படத்திலிருந்து விலக்கியது.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் உடைய தந்தையும் எதிர்பாராத விதமாக மரணித்து விட்டார் இதனால் நடிகர் அஜித்தால் திரைப்படத்தில் உடனடியாக நடிக்க முடியாமல் போய்விட்டது.

இப்படி சில காரணங்களால் தடைப்பட்ட ஏகே 62 திரைப்படத்தினால் இயக்குனர் மகிழ் திருமேனி வேறு ஒரு கதையை நடிகர் சிம்புவுடன் இயற்கை இருந்தார். ஆனால் மீண்டும் தற்பொழுது நடிகர் அஜித் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் நடிகர் சிம்பு முதலில் நீங்கள் நடிகர் அஜித்துடன் அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது .

இதனால் மகிழ்திருமேனி ஏகே 62 திரைப்படத்தை நடிகர் அஜித்துடன் இயக்கப் போவதாக கூறப்படுகிறது
அதேசமயம் எஸ் டி ஆரின் உடைய 48வது திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாய் என்ற திரைப்படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரிய சாமியின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் முடிந்த பிறகு மீண்டும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தை எஸ்டிஆர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அந்த திரைப்படமானது வருகின்ற 2024 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என்றும் அந்தத் திரைப்படம் எஸ் டி ஆரின் ரசிகர்களுக்கு மிக சிறந்த மகிழ்ச்சி தரக்கூடிய மாஸ் ஹிட் தரும் என்றும் கூறப்படுகிறது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தற்பொழுது நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்காக சில பயிற்சிகளை மேற்கொண்ட வருவதற்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Most Popular