Wednesday, April 24, 2024
- Advertisement -
HomeEntertainmentபட்டையைக் கிளப்ப தயாராகும் தனுஷின் 50-வது படம்… நடிகருக்கு சகோதரர் ஆகிறார் எஸ்ஜே சூர்யா… ரசிகர்களை...

பட்டையைக் கிளப்ப தயாராகும் தனுஷின் 50-வது படம்… நடிகருக்கு சகோதரர் ஆகிறார் எஸ்ஜே சூர்யா… ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் இதோ!

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கில் நேரடியாக நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

இதை எடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் ஐம்பதாவது படத்திலிருந்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இதுபோக விஷ்ணு விஷால் மற்றும் நடிகை துஷாரா விஜயனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தொடர்ந்து, தனது ஐம்பதாவது படவேளையில் தனுஷ் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புதுப்பேட்டை வடசென்னை படங்களில் அந்தப் பகுதி இளைஞராகவே ரசிகர்களை ஈர்த்த தனுஷை, இந்தப் படத்தில் புதிய பரிமாணத்தில் பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

Most Popular