Tuesday, April 16, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடாமுயற்சி வாய்ப்பால் சிம்பு படத்தை கைவிட்ட மகிழ் திருமேனி… விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க திட்டம்!

விடாமுயற்சி வாய்ப்பால் சிம்பு படத்தை கைவிட்ட மகிழ் திருமேனி… விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க திட்டம்!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முந்தைய படங்களான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிம்புவிற்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். சிலம்பரசனின் 48 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தபடம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதாகவும் அதற்காக தற்போது நீண்ட தலைமுடியுடன் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் லொகேஷன்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனிடையே தேசிங்கு பெரியசாமியுடன் இணைவதற்கு முன்னதாக, இயக்குனர் மகிழ் திருமேனி சிம்புக்கு கதை தயாரித்து வைத்ததாகவும், இது சிம்புவுக்கும் பிடித்து போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரிக்க திட்டமிட்ட நிலையில்தான், மகிழ் திருமேனிக்கு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் சிம்பு படத்தை ஒத்திவைத்து விட்டு, விடாமுயற்சியில் கவனம் செலுத்த மகிழ் திருமேனி சென்று விட்டாராம். கிடைத்த இடைவெளியில் தேசிங்கு பெரியசாமியின் கதையை ஓகே செய்த சிம்பு, படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். வரும் 1-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் சிம்பு – மகிழ் திருமேனி கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular