சினிமா

Suriya 42 – ஓடிடி 2வது அதிக தொகைக்கு விற்கப்பட்டு சாதனை.. முதல் படம் எது?

நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் சூர்யா 42 என்று அழைக்கப்படும் திரைப்படம் இருக்கிறது. காரணம் மிகப் பெரிய பொருட் அளவில் சூர்யாவை நம்பி இந்த படம் எடுக்கப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Advertisement

சூர்யா 42 திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சிறுத்தை சிவா எப்போதுமே கிராமப் படங்களை சிறப்பாக கையாளக்கூடியவர். எனினும் அவர் எடுத்த விவேகம் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும் கதையில் கோட்டை விட்டார். ஆனால் சூர்யா 42 திரைப்படம் பழங்கால வரலாற்று சம்பவத்தை கூறும் திரை காவியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பெயர் டீசர் எதுவுமே ரிலீஸ் ஆகாத நிலையில், அமேசான் நிறுவனம் இந்த படத்தை பெரும் தொகைக்கு கொடுத்து வாங்கி இருப்பதாக தெரிகிறது. இது சூர்யா திரைப்பட வாழ்க்கையிலும் தமிழ் சினிமா திரைப்பட வரலாற்றிலும் இரண்டாம் அதிகபட்ச தொகையாகும். முதல் இடத்தை நடிகர் விஜயின் லியோ திரைப்படம் தான் பிடித்துள்ளது.

Advertisement

முன்பாக லியோவின் சாதனைகளை சூரியா 42 முறியடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்ற தகவல் தற்போது கூறப்படுகிறது. இந்த நிலையில் சூரியா 42 திரைப்படம் இரண்டு பாகங்களாக வரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் ஏப்ரல் 14ஆம் தேதி வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா 42 திரைப்படம் முடிந்தவுடன் வரும் அக்டோபர் மாதம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள வெற்றிமாறன் சூர்யா கூட்டணி இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை எடுக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top