Friday, March 29, 2024
- Advertisement -
HomeEntertainmentபாகுபலி பக்கத்துல கூட பொன்னியின் செல்வனால் வர முடியாது.. தரத்துலயும் சரி, கலெக்‌ஷன்லயும் சரி.. வரிந்துகட்டி...

பாகுபலி பக்கத்துல கூட பொன்னியின் செல்வனால் வர முடியாது.. தரத்துலயும் சரி, கலெக்‌ஷன்லயும் சரி.. வரிந்துகட்டி வன்மத்தை கக்கும் தெலுங்கு ரசிகர்கள்!

மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன்-2 வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் நிலையில், மறுபுறம் தெலுங்கு நெட்டிசன்கள் பாகுபலியை கம்பேர் செய்து கிண்டலடித்து வருகின்றனர். கல்கியின் வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து மணிரத்னம் எடுத்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

- Advertisement -

இரண்டு பாகங்களாக உருவான இந்தப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர்
20ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் படத்தை தமிழர்களின் பெருமையாக கொண்டாடினர்.

இந்தநிலையில், படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதேசமயம் சமூகவலைதளங்களில் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க, தெலுங்கு ரசிகர்கள் சிலர் பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்து வருகின்றனர். என்ன ஆனாலும் பாகுபலியுடன் போட்டியிட முடியாது என்றும், வசூலில் தொடக்கூட முடியாது என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

பாகுபலி 1,700 கோடியை வசூல் செய்தது என்றால், பொன்னியின் செல்வன் 700, 800 கோடியை தான் வசூலிக்கும் என கிண்டல் செய்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போதே பாகுபலி படத்தின் தரம் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular