Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமா“ காவல் துறையில் நடக்கும் இந்த கொடுமை... ” உண்மைச் சம்பவங்களை படமாக்கும் ரஜினி -...

“ காவல் துறையில் நடக்கும் இந்த கொடுமை… ” உண்மைச் சம்பவங்களை படமாக்கும் ரஜினி – ஞானவேல்.. !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து 3 படங்களின் அறிவிப்புகளை கொடுத்துவிட்டார். நான்காவதாக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை. தற்போது பெரும் படையுடன் ஒன்றரை வருடமாக நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கும் ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் முறை ரஜினியிடம் பெரிய வெற்றிப் படத்தை எதிர்பார்க்கிறது. இந்தப் படத்திற்கு பின்னர் தன் மகள் ஐஷ்வர்யாவின் இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் ஹீரோவாக இல்லாமல் கவுரவ தோற்றம் மட்டுமே அளிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

லால் சலாம் எனும் தலைப்புக் கொண்ட இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் வகையில் உருவாகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வந்தது. படத்தில் ரஜினி முஸ்லிமாக நடிக்கிறார். தலைப்பிலேயே அதை நாம் உணரலாம்.

- Advertisement -

தலைவர் 170

லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தை ஜெய் பீம் எனும் பெரிய வெற்றித் திரைப்படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் தலைமை தாங்குகிறார். இந்தப் படத்திலும் ரஜினிகாந்த் அவர்கள் முஸ்லிமாக வருவார் என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

- Advertisement -

உண்மைச் சம்பவங்களை மையாக கொண்ட ஜெய் பீம் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த டி.ஜே.ஞானவேல் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கிறார். முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் போலி என்கவுண்டரை சுற்றி நடக்கும் விஷயங்களை காட்டுகிறார் இயக்குனர். இதுவும் உண்மைச் சம்பவம் என்பதால் எதிர்பார்ப்பு கூடுகிறது.

Most Popular