சினிமா

வாடிவாசல் எப்படி இருக்கும்? படம் முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?

நடிகர் சூர்யா ,வெற்றிமாறன் இணைந்து பணியாற்ற போகும் திரைப்படம் வாடிவாசல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, வாடிவாசல் திரைப்படம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான அப்டேட்கள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சூர்யா தனது 42வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா உடன் பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க இருக்கிறார்.

இருவரும் தங்களுடைய படங்களை முடித்த பிறகு வாடிவாசலில் இணைய உள்ளார்கள். இந்த நிலையில் வாடிவாசல் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எத்தனையோ படங்கள் வந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் வாடிவாசல் திரைப்படம் அனைத்திலும் மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும் என்றும் இது முழுக்க முழுக்க வெற்றிமாறனின் படம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

வெற்றிமாறன் படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் வாடிவாசலில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தப் படம் நிச்சயமாக மாஸ் ஹீரோவுக்கு ஏற்ற வகையில்  இருக்கும் என குறிப்பிட்டு அவர் படப்பிடிப்பு ஏழு மாதத்தில் இருந்து எட்டு மாதங்கள் வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.


இதனால் வாடிவாசல் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு தீபாவளிக்கு அல்லது 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடி வாசல் திரைப்படம் 1960களில் நடைபெறும் கதை களத்தில் கொண்டது என்பது கூடுதல் தகவல்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top