Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாதொடரும் தோல்வி.. சேதுபதி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

தொடரும் தோல்வி.. சேதுபதி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். தனது வித்தியாசமான நடிப்பாலும் உழைப்பாலும் உச்சத்துக்கு சென்ற விஜய் சேதுபதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கான்க்கு வில்லன் கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவர் அண்மையில் நடித்த பார்சி என்ற வெப் சீரிஸும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை அதிக மக்களால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் என்ற பெயரையும் ஃபார்சீ பெற்றது.

- Advertisement -

ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக தனியாக நடிக்கும் படங்கள் அவ்வளவு ஆக வெற்றியை பெறவில்லை. அவர் கடைசியாக நடித்த டிஎஸ்பி திரைப்படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் மாறிவிட்டது. இதேபோன்று அண்மையில் வெளியான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படமும் பெரிய விமர்சனத்தை தரவில்லை.

- Advertisement -

அவர் கடைசியாக நடித்த பல படங்களுக்கு இதே நிலைமைதான். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டும் விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் வெற்றியை பெற்றுத் தந்தது. இதனால் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் அருண்முக குமார் உடன் இணைந்து இருக்கிறார்.

இவர் விஜய் சேதுபதி வைத்து சேதுபதி பண்ணையாரும் பத்மினியும், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்களை எடுத்திருக்கிறார். இதில் சேதுபதி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் பண்ணையாரும் பத்மையும் விமர்சன ரீதியாக விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Most Popular