Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா25 Years of துள்ளாத மனமும் துள்ளும்.. விஜய், சிம்ரன்க்கு பதில் யார் நடிக்க இருந்தார்கள்...

25 Years of துள்ளாத மனமும் துள்ளும்.. விஜய், சிம்ரன்க்கு பதில் யார் நடிக்க இருந்தார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான் அவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் பல கோடி ரசிகர்களை பெற்று தந்தது. தமிழ் சினிமாவில் நடிகராக விஜய் இருந்தாலும் கேரளாவில் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

- Advertisement -

கேரளாவில் மோகன்லால் மம்முட்டி திரைப்படங்களை விட நடிகர் விஜயின் திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூலையும், கடந்த ஆண்டு அதிக வசூலையும் பெற்ற திரைப்படமாக  இருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்களை பெற்றுத்தந்த முதல் திரைப்படமாக துள்ளாத மனமும் துள்ளும் தான் இருந்துள்ளது.

இந்த படம் இன்று வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்து இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய் மற்றும் சிம்ரனுக்கு பதிலாக யார் நடிக்க இருந்தார்கள் என்பது குறித்து நீங்கள் அறிந்தால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள்.

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் எழில் எழுதி இயக்கி இருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தை ஒரு நகைச்சுவை கலந்த எமோஷனல் திரைப்படம் எடுக்க தான் எழில் திட்டமிட்டு இருந்தார். விஜய்க்கு பதில் வடிவேலுவையும் சிம்ரனுக்கு பதில் கோவை சரளாவையும் நடிக்க வைக்க இயக்குனர் ஏழில் திட்டமிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தை பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் நடித்த திரைப்படத்தை தழுவி கதையை அவர் தயார் செய்திருந்தார். தி கிட் என்ற திரைப்படத்தில் ஒரு சிறுவனுக்கு நடிகர் சார்லி சாப்ளின் பல்வேறு உதவிகளை செய்து வந்து அவரை அரவணைத்து காத்து வருவார்.

அதை போல் வடிவேலு கோவை சரளாவை அரவணைத்து பாதுகாப்பது போல் படம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. வடிவேலு நடிப்பதால் திரைப்படம் காமெடியாகவும் இயக்க எழில் திட்டமிட்டு இருந்தார். இந்த கதையை தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியிடம் எழில் சொன்னபோது கதை நன்றாக இருக்கிறது.

இதை சோகமாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் இதில் காமெடி நடிகர்கள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளை போட்டு திரைக்கதையை மாற்றி எழுதுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு தான் காமெடியாக இருந்த படத்தை சோகமாக இயக்குனர் எழில் மாற்றி இருக்கிறார். அதன் பிறகு தான் இந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய் சிம்ரனை வைத்து உருவாகி இருக்கிறது.

Most Popular