Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"சௌந்தர்யாவைத்தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன்" - பிரபல நடிகையின் கணவர் கொடுத்த ஷாக்கிங் பேட்டி!

“சௌந்தர்யாவைத்தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன்” – பிரபல நடிகையின் கணவர் கொடுத்த ஷாக்கிங் பேட்டி!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி . தமிழில் 20க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவர் இயக்குனர் மணிவண்ணிடம் உதவியாளராக பணியாற்றியவர் . முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . உள்ளத்தை அள்ளித்தா அருணாச்சலம் மற்றும் அன்பே சிவம் ஆகியவை இவரது இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும் . இவை தவிர மேட்டுக்குடி வின்னர் கலகலப்பு லண்டன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் உருவான நகைச்சுவை திரைப்படங்களாகும் . அரண்மனை என்ற நகைச்சுவை கலந்த திகில் திரைப்படத்தை மூன்று தொடர்கள் முடித்து நான்காவது தொடராகவும் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இயக்குனராக பணியாற்றி வந்த இவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சில வருடங்கள் நடித்த இவர் அவ்வப்போது திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் . அதன் பிறகு அரண்மனை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனரானார். இவர் நடிகை குஷ்புவை 2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . சுந்தர் சி யும் குஷ்பூவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .

தற்போது குஷ்பூ தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் வேளையில் சுந்தர் சி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு அரண்மனை நாலு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் தனது திருமணம் பற்றி மனம் திறந்து இருக்கிறார் சுந்தர் சி இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றியத்தை அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் சி தான் குஷ்பூ சந்திக்கவில்லை என்றால் எந்த நடிகையை மனம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார் . குஷ்பூ என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் தான் இந்த நடிகைக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்றும் சுந்தர் சி கூறியிருப்பது அவருக்கு அந்த நடிகையை எவ்வளவு பிடிக்கிறது என்பதை காட்டுகிறது

- Advertisement -

இது குறித்து மனம் திறந்துள்ள சுந்தர் சி குஷ்பூ என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான்
மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார் . தனக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் அவரும் ஒருவர் எனக் கூறிய சுந்தர் சி குஷ்பு வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் சௌந்தர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார்

- Advertisement -

Most Popular