Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநானும், தளபதி விஜயும் இதற்காகத்தான் இணைந்து நடித்திருக்கிறோம்..! உண்மையை உடைத்த நடிகர் பிரசாந்த..!

நானும், தளபதி விஜயும் இதற்காகத்தான் இணைந்து நடித்திருக்கிறோம்..! உண்மையை உடைத்த நடிகர் பிரசாந்த..!

90s களின் ஃபேவரிட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவருடைய அழகான தோற்றத்திற்கு ரசிகர்களால் இவர் ஆணழகன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டார் . நடிகர் பிரசாந்த் ஆணழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் பிரசாந்த் விஜய் ,அஜித் போல தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சில நாட்கள் இவர் சினிமாவிற்கே தலைகாட்டாமல் விலகி இருந்தார். அதற்குப் பிறகு தெலுங்கு போன்ற சினிமாக்களில் துணை நடிகராக நடித்து வந்தார் நடிகர் பிரசாந்த்.

இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கம் கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் அதிகாரிகளுடன் இணைந்து  தலைக்கவசத்தை இலவசமாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி தெரிந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று இது குறித்து பேட்டி எடுத்திருக்கிறார்கள் .திடீரென்று நீங்கள் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன காரணம் என்று கேட்டார்கள் .இதில் திடீரென்று நான் எதையும் செய்யவில்லை காலம் காலமாக இதை நான் செய்து கொண்டு தான் வருகிறேன் என்று பதில் அளித்தார் நடிகர் பிரசாந்த்.

- Advertisement -

அப்பொழுது அவரிடம் கோட் திரைப்படத்தைப் பற்றிய சில கேள்விகளும் கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் பிரசாந்த் நான் தளபதியுடன் நடிப்பது நன்றாக இருக்கிறது .திரைப்படம் நல்லபடியாக வருகிறது என்று கூறி இருக்கிறார் .

நீங்களும் ,தளபதி விஜய்யும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் பிரசாந்த் இடம் கேட்டார். அதற்கு அவர் நீங்கள் சொல்லியது போல் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம் .அதற்காக தான் நாங்கள் எல்லாம் இணைந்து நடிப்பது.

திரையரங்குக்கு சென்று நாங்கள் நடிக்கும் படங்களை பார்த்த பிறகு சூப்பர்டா என்று விமர்சிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முயற்சிக்கு காரணம். எங்களை பொறுத்தவரை மக்களை மகிழ்விக்க வேண்டும் அதுவே எங்கள் நோக்கம் என்று கூறியிருக்கிறார். நடிகர் பிரசாந்த் மேலும் எங்களுடன் இணைந்து பிரபுதேவா நடிக்கிறார் அது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு  நன்றி என்று கூறியிருந்தார் நடிகர் பிரசாந்த்.

Most Popular