Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதொடரை விட்டு விலகிய நடிகை லட்சுமி பிரியா..! சோகத்தில் ரசிகர்கள்..!

தொடரை விட்டு விலகிய நடிகை லட்சுமி பிரியா..! சோகத்தில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் மகாநதி தொடரில் காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி பிரியா நடித்து வருகிறார் .தமிழில் இவருக்கு இதுதான் முதல் தொடராகும் .இதில் இவர் நடித்து வரும் காவேரி என்ற கதாபாத்திரம் நல்ல ரீச்சை அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஆசியா நெட்டில் ஒளிபரப்பப்பட்ட சந்திரகாந்தம் என்ற தொடரிலும் நந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை லட்சுமி பிரியா. இவர் சில நாட்களுக்கு முன்பு சந்திரகாந்தம் தொடரை விட்டு விலகி விட்டார்.

அந்த தொடரை விட்டு இவர் விலகியதனால் ரசிகர்கள் இவருக்கு மெசேஜ்களும், கமெண்ட்ஸ்களும் செய்து இந்த தொடரை விட்டு ஏன் விலகி விட்டீர்கள்?. உங்களுக்காக தான் இந்த தொடரையே பார்த்தோம். நந்தா இல்லாமல் தொடர் நன்றாகவே இல்லை. இனி தொடரை பார்க்கப் போவதில்லை என்று நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இது எல்லாவற்றையும் பார்த்த நடிகை லட்சுமி பிரியா இரண்டு நாட்களுக்கு முன்பு லைவில் தொடரை விட்டு தான் ஏன் விலகினேன் என்பதை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மலையாளமே தெரியாத மலையாள தொடரின் நடிகை ஆன லட்சுமி பிரியா தமிழில் தன்னுடைய மலையாள ரசிகர்களுக்கு தன்னுடைய காரணத்தை தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில் நடிகை லட்சுமி பிரியா தனக்கு உடல்நல குறை இருப்பதாகவும் மாதம் மாதம் கேரளாவிற்கு பயணிக்க முடியவில்லை என்பதற்காகவும் தான் அந்த தொடரை விட்டு விலகி விட்டேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தன் மீது அன்பு பாராட்டும் ரசிகர்களுக்கு தானும் தாங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார் .அதேபோல் நான் இல்லாவிட்டால் அந்தத் தொடரை யாருமே பார்க்கப் போவதில்லை என்று நீங்கள் பலர் குறிப்பிடுகிறீர்கள் .அப்படியெல்லாம் இருக்க வேண்டாம் என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்களோ அந்த அளவிற்கு அந்த தொடரையும் நேசித்து பாருங்கள். தற்பொழுது நந்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் மிகவும் திறமையானவர் .அவருக்கும் உங்களுடைய ஆதரவை கொடுங்கள் என்று வேண்டி கேட்டுக் கொண்டிருந்தார் நடிகை லட்சுமி பிரியா.

மேலும் தான் உடல் நலம் தற்பொழுது தேறி வருவதாகவும் அதற்காக சில மெடிடேஷன்களை  செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்  லட்சுமி பிரியா. தற்பொழுது தமிழில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் மகாநதி தொடரில் தன் நடிப்பை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Most Popular