Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா" நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள்" - பிரபல...

” நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள்” – பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய்லர் . இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அண்ணாத்த மற்றும் தர்பார் என இரண்டு தோல்வி படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ஜெய்லர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . மேலும் இந்த எதிர்பார்ப்பை ஏகரச் செய்யும் வகையில் ஜெய்லர் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் பாலிவுட் முன்னணி நடிகர் ஜாக்கி சராஃப் போன்றோர் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் ஆக உருவாகி இருக்கிறது..

- Advertisement -

இந்தத் திரைப்படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது . இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் . சூப்பர் ஸ்டார் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ஜெய்லர் திரைப்படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது . இந்நிலையில் திரைப்படத்தின் முதல் பாடலான கவாலா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது .

இருந்தாலும் இந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாரை முன்னிலைப்படுத்தவில்லை என அவரது ரசிகர்களிடம் ஒரு ஏமாற்றும் நிலவுகிறது . சூப்பர் ஸ்டார் திரைப்படங்கள் என்றாலே அவரை முன்னிலைப்படுத்தி தான் ரொம்ப சின்கள் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் சிங்கிள் பாடலில் நடிகை தமன்னாவை முன்னிலைப்படுத்தி வெளியாகி இருக்கிறது . இது தொடர்பாக தமிழ் திரை உலகில் சிறிய சலசலப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து பிரமுலா சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் . சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் அவர் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் செய்யாறு பாலு நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் வேண்டுமென்றே தமன்னாவை முன்னிலைப்படுத்தி பாடலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் போன்ற உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள் அவருடைய ஸ்டைல் மற்றும் அவர் திரையில் தோன்றுவதை தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்று கூறிய அவர் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தாமல் தமன்னாவை மையப்படுத்தி இந்தப் பாடலை ஏன் வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பி இருக்கிறார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய செய்யாறு பாலு டாக்டர் படத்தின் பாடல் புரமோஷன் போது அனிருத் மற்றும் நெல்சன் இணைந்து வெளியிட்ட ஃபுல் மூவி வீடியோ ரசிகர்களிடம் வைரலானது என்றாலும் பீஸ்ட் படத்தின் போது அவர்கள் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார் . தற்போது ஜெய்லர் திரைப்படத்திலும் அவர்கள் கையாண்டிருக்கும் யூத்தி ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் வெறுப்பை பெற்றுள்ளதாகவே தெரிகிறது எனவும் கூறி இருக்கிறார். அந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் எனக் கூறியிருக்கும் அவர் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் அவரை முன்னிலைப்படுத்தாமல் தமன்னாவை முன்னிலைப்படுத்தி இருக்கும் முதல் பாடலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

Most Popular