Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் சங்கர் மகள் வாழ்வில் இப்படி ஒரு சோகமா..? நடிகை அதீதி சங்கர் வெளியிட்ட...

இயக்குனர் சங்கர் மகள் வாழ்வில் இப்படி ஒரு சோகமா..? நடிகை அதீதி சங்கர் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சங்கர் . பிரம்மாண்டமான திரைப்படங்கள் என்றாலே அது இயக்குனர் ஷங்கரின் திரைப்படம் என்பதை குழந்தைகள் கூட கூறி விடுவார்கள். அந்த அளவிற்கு பெயர் பெற்றவர் இயக்குனர் சங்கர்.

- Advertisement -

சினிமா துறையில் கொடி கட்டி பறக்கும் இயக்குனர் சங்கரின் சொந்த வாழ்வில் சில சோகங்கள் இருக்கிறது. இயக்குனர் சங்கருக்கு ஐஸ்வர்யா சங்கர் ,அதிதி ஷங்கர் இன்று இரண்டு மகள்களும், அர்ஜித் சங்கர் என்ற மகனும் உள்ள நிலையில் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு 2022 பிரம்மாண்டமாக புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்துக்கு மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.

இரண்டாவது மகள் அதிதி சங்கர் ஒரு பிரபலமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் கார்த்திக்குடன் இணைந்து விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதேசமயம் தற்பொழுது மாவீரன் போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களிலும் பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இதில் திருமணமான மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வாழ்வு தான் இயக்குனர் ஷங்கரின் மனதை கனக்க வைத்து விட்டது. தன் மகளை திருமணம் செய்த கணவரான ரோகித் திருமணமாகி சில நாட்களிலேயே போக் ஷோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணத்தினால் ஏறத்தாழ ஆறு மாதங்கள் கூட ஐஸ்வர்யா சங்கரும் ரோகித்தும் இணைந்து வாழவில்லை. கைது செய்யப்பட்ட கணவரோடு வாழ்வது சரியில்லை என்று தன் மணவாழ்வை அதோடு முடித்துக் கொண்டார் ஐஸ்வர்யா சங்கர் .இருவருக்கும் சட்டபூர்வமான விவாகரத்தும் ஆகிவிட்டது .இந்த சோகம் இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது.

இந்த நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா சங்கருக்கு இரண்டாம் திருமணம் செய்யப் போவதாகவும் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் தற்பொழுது நிச்சயம் நடக்கப்பட்ட இருப்பதாகவும் ,ஷங்கரின் இரண்டாவது மகளான நடிகை அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் ,மணமகனின் புகைப்படத்தை போட்டு இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை பிரம்மாண்டமாக இயக்கி ரசிகர்களை மகிழ்வித்த இயக்குனர் சங்கரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா என்று ரசிகர்களும் வருந்தி வந்த நிலையில் இந்த செய்தி தற்பொழுது ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்திருக்கிறது .இந்த வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா சங்கருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular