Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாபூர்விக கிராமத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி … அந்த கிராம மக்களுக்கு...

பூர்விக கிராமத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி … அந்த கிராம மக்களுக்கு அவர் செய்த உதவிகள் என்ன தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய பூர்வீக கிராமத்தில் தனது பெற்றோருக்கு சிலை மற்றும் நினைவிடம் அமைத்ததோடு அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .

- Advertisement -

40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் அவரது பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய நாச்சிக்குப்பம் என்ற கிராமமாகும் . இந்த கிராமத்தில்தான் ரஜினிகாந்தின் மூதாதையர்களும் அவரது பெற்றோரும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் .

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பெற்றோருக்கு நினைவிடம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார் ரஜினிகாந்த் . இதற்காக அவரது அண்ணன் சத்திய நாராயண ராவ் மூலம் அடிக்கணும் நாட்டினார் . இருந்த போதிலும் அந்த இடம் வேலி போட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது . ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொங்கல் மற்றும் விசேஷங்களின் போது அப்பகுதியில் வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர் .

- Advertisement -

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நினைவிடத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் நிறைவடைந்துள்ளது . சூப்பர் ஸ்டாரின் பெற்றோர்களான ரானோஜிராவ் – ராம்பாய் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டு நினைவிடமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது . மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கால்நடைகளுக்கென்று தனியாக குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது . இந்தப் பணிகள் தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் அவரிடம் பகிர்ந்திருக்கிறார் . ரஜினிக்கும் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் அவரால் வர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது மட்டும் அல்லாமல் சினிமா துறையிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பல உதவிகளை ரஜினி செய்து இருக்கிறார். அவரது சொந்த தயாரிப்பில் உருவான திரைப்படங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை சினிமாவில் கஷ்டப்பட்டு வரும் இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் டெக்னீசியன்கள் ஆகியவற்றிற்கு பகிர்ந்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருணாச்சலம் மற்றும் படையப்பா ஆகிய திரைப்படங்களில் லாபங்களை கஷ்டப்பட்டு வரும் தன்னுடைய முன்னாள் இயக்குனர்கள் மற்றும் செகண்ட் நெகடிகளுக்கும் டெக்னீசியன்களுக்கும் பகிர்ந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இது போன்ற பல உதவிகளை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Most Popular