Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமா"தளபதியை கண்டு மிரண்டு போன தெலுங்கு சினிமா குடும்பம்" - பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்து...

“தளபதியை கண்டு மிரண்டு போன தெலுங்கு சினிமா குடும்பம்” – பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்து அதிரடி தகவல் .!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இந்த வருடத்தில் இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது .

- Advertisement -

தற்போது தளபதி விஜய் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு துபாய்க்கு ஓய்விற்காக சென்று இருக்கிறார். துபாயில் இருந்து திரும்பியவுடன் தளபதி 68 திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது .

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் வம்சி டிப்பள்ளி என்ற பிரபலமான தெலுங்கு சீமா இயக்குனரால் இயக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வாரிசு திரைப்படம் ஆனது குறித்த நேரத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை. இதற்குப் பின்பு தெலுங்கு சினிமாவின் அரசியல் இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தெலுங்கு சினிமாவை பொருத்தவரை அங்கு குடும்ப அரசியல் மற்றும் ஜாதி ரீதியான அரசியல் என இரண்டு பிரிவுகள் இருப்பதாக குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அந்தக் குடும்பம் மற்றும் ஜாதி கட்டமைப்புகளை தாண்டி ஒரு நடிகர் மேலே வருவது மிகவும் கடினமான ஒரு விஷயம் என தெரிவித்தார். அப்படி எந்தப் பின்புலமும் இல்லாமல் வரும் நடிகர்கள் கூட இந்தக் குடும்ப கட்டமைப்பில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களின் புகழ் பாடினால் மட்டுமே தெலுங்கு சினிமாவில் நிலைத்திருக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்படுவதற்கு முன்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அந்தத் திரைப்படத்தின் உரிமைகளை தான் வாங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அங்கு இருக்கக்கூடிய பட விநியோகஸ்தர்கள் மகேஷ்பாபுவிடம் நீங்கள் வேறுபடுத்தி உரிமையை வாங்கிக் கொள்ளுங்கள் இந்தப் படத்தை நாங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து நாலு காசு பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்து இருக்கின்றனர்

இதனைத் தொடர்ந்து அவர் தீனா முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றிய ஸ்பைடர் திரைப்படம் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.. விஜய் திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் முதல்முறையாக அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடித்திருந்ததால் அந்த மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் என்ற பயத்தில் திருப்பி சினிமாவை பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் குடும்ப அரசியல் வாரிசு படத்திற்கு பல சிக்கல்களை தந்ததாக தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

Most Popular