Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஎப்புட்றா… அஜித்தின் ரீல் மகளுக்கு அட்வான்ஸ் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டா.? படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு.!

எப்புட்றா… அஜித்தின் ரீல் மகளுக்கு அட்வான்ஸ் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டா.? படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு.!

திரைப்பட நடிகைகளில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் கதாநாயகியாகவும் புகழ்பெற்று வந்துள்ளனர் நடிகை மீனாவும் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் கதாநாயகியாக வந்தவர் . அந்த வகையில் இருப்பவர் தான் கேரளாவைச் சார்ந்த நடிகை அனிகா சுரேந்தர் . இவர் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவிற்கு மகளாகவும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் குமாருக்கு மகளாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . திரைப்படங்களில் அஜித்தின் மகள் என்றால் இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த இரண்டு திரைப்படங்களின் மூலமா அஜித்தோடு ஒன்றி போய்விட்டார் .

- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக நயன்தாராவிற்கு மகளாக நடித்த இவர் தற்போது மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . இவரை குட்டி நயன்தாரா எனவும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர் . அண்மையில் கூட பட விழாவில் இவர் கலந்து கொண்ட போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்தது . நிலையில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் அனிகா சுரேந்தர் . தமிழில் ஹிப் ஹாப் ஆதியுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

தற்போது இவரது நடிப்பில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது . மலையாளத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்தர் . இவரது கொஞ்சம் நடிப்பிற்கும் குறும்பான முக பாவத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் குழந்தை என்று சித்திரமாக வெற்றிகரமாக வலம் வந்தவர் கதாநாயகியாகவும் வெற்றி நடை போடுவார் என இவரைப் பற்றி சினிமா பிரபலங்கள் கணித்து வருகின்றனர் . அந்த அளவிற்கு இவருக்கு திரையுலகில் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது

- Advertisement -

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே ஊரெங்கும் இவரது மரண அஞ்சலி போஸ்டர் ஓட்ட போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இந்த செய்திகள் சமூக ஊடகங்களிலும் தீயாகப் பரவியது . இதனைப் பார்த்த அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர் . அதன் பிறகு அந்த போஸ்டரை படித்துப் பார்த்தபோது தான் தெரிந்தது அது திரைப்பட சூட்டினிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று . இவர் நடித்துவரும் தமிழ் படம் ஒன்றின் சூட்டிங் காக அனிகா சுரேந்தரின் புகைப்படத்தை போட்டு நந்தினி என்ற பெயரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பொள்ளாச்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்தது . மேலும் 16 .07,2023 தேதியில் மரணமடைந்ததாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு தான் இதனைப் பற்றி விசாரித்து பார்த்ததில் இந்த போஸ்டர் திரைப்பட சூட்டிங் இருக்காங்க ஒட்டப்பட்டு இருக்கிறது என தெரிந்தது . அதன் பிறகு தான் அஜித் ரசிகர்கள் அமைதி அடைந்தனர் . இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி இருக்கிறது .

- Advertisement -

Most Popular