Friday, May 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவுடன் இணைய இருக்கும் பாலிவுட் இயக்குனர்? அப்டேட் விரைவில் !

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவுடன் இணைய இருக்கும் பாலிவுட் இயக்குனர்? அப்டேட் விரைவில் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவர் சில காலங்களாகவே வில்லனாகவும் கலக்கி வருகிறார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்று வரும் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனக்கென முத்திரையை பதித்து வருகிறார் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பார்சி வெப் சீரியஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இதனைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

- Advertisement -

தமிழ் சினிமாவிலும் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது திரைப்படம் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதனைத் தொடர்ந்து தனது ஐம்பதாவது திரைப்படத்தில் குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் . இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப்  வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இவர் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் அதர்வா முரளி நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தனது ஐம்பதாவது திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி விரும்புகிறாராம் . அதனாலேயே அந்த திரைப்படத்திற்காக போல புதிய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வருடங்களில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இதுவரை விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது . தனது ஐம்பதாவது திரைப்படத்தை மறக்க முடியாத ஒரு திரைப்படம் ஆக மாற்றுவதற்கு வித்தியாசமான முயற்சியாக அவர் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு மகாராஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் எனவும் இந்தப் படக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . சமீப காலங்களில் வில்லனாகவே நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது கதாநாயகனாக திரும்பி வருவதால் இத்திரைப்படத்திற்கு அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது திரைப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

Most Popular