Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா"தல அஜித்திற்காக எஸ்ஜே சூர்யா செய்த செயல்" - இயக்குனர் மற்றும் நடிகருமான எதிர்நீச்சல் புகழ்...

“தல அஜித்திற்காக எஸ்ஜே சூர்யா செய்த செயல்” – இயக்குனர் மற்றும் நடிகருமான எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான அனுபவம்!

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக விளங்கி வருபவர் மாரிமுத்து . இவர் சினிமா ஓட்டு பொல்லாத சின்னத்திரை தொடர்களிலும் நடித்த வருகிறார் . மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மிகச் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . எதார்த்தமான நடிப்புக்கு பெயர் போனவர் . தற்போது சின்னத்திரையிலும் தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் இவர் நடித்திருக்கும் குணசேகரன் என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது . இவரது திறமையான நடிப்பால் ரசிகர்கள் இவரது கதாபாத்திரத்தோடு ஒன்றி பொய் உள்ளனர் . நடிகர் மாரிமுத்து சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார் . இவர் பிரபல இயக்குனர்களான எஸ் ஜே சூர்யா மற்றும் வசந்த் ஆகியோரிடம் உதவியக்குனராக பணியாற்றியவர் .

சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா உடன் ஆன தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . இயக்குனர் வசந்திடம் எஸ் ஜே சூர்யா மாரிமுத்து ஆகிய இருவருமே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளனர் . அவர் இயக்கிய ஆசை படத்தில் இருந்து உதவி இயக்குனராக அவரிடம் பணியாற்றி இருக்கின்றனர் . இதன் காரணமாக இருவரிடமும் நல்ல பலமான நட்பு இருக்கிறது . இந்நிலையில் ஆசை படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை எஸ் ஜே சூர்யா வின் கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறினார் மாரிமுத்து .

- Advertisement -

ஆசை திரைப்படத்திற்கான சூட்டிங் டெல்லியில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அப்போது சென்னையில் இருந்த எஸ் ஜே சூர்யாவை சந்தித்த படக்குழு அஜித் சுவலட்சுமிக்கு பரிசாக கொடுக்கும் நாய்க்குட்டியை சென்னையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் எடுத்துப் போக சொல்லி இருக்கின்றனர் . நாய்க்குட்டியை வாங்கிக் கொண்டு எஸ் ஜே சூர்யா இரண்டு நாட்களில் பத்திரமாக அதனை கொண்டு டெல்லியில் சேர்த்திருக்கிறார் . ஒரு மனிதன் ரயிலில் தனியாக சென்றாலே இரண்டு நாட்கள் என்பது கஷ்டமாக இருக்கும் . அதுவும் ஒரு நாய் குட்டியை கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது எவ்வளவு சிரமமான காரியம் . அதனையும் சிறப்பாக செய்து முடித்தவர் எஸ் ஜே சூர்யா எனக் கூறினார் .

- Advertisement -

இதனை எஸ் ஜே சூர்யா வின் கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறினார் மாரிமுத்து மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் முதல் படமான வாலி படத்தில் அவருடன் இணைந்து உதவி இயக்குனராக பணியாற்றியதையும் பகிர்ந்து கொண்டார் . வாலி,குஷி,நியூ மற்றும் அன்பே ஆருயிரே ஆகிய திரைப்படங்களில் அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மாரிமுத்து . அவரை மிகச் சிறந்த நண்பர் என்று கூறியவர் தங்கள் இருவருக்கும் பல மறக்க முடியாத நினைவுகள் இருப்பதாகவும் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்

Most Popular