சினிமா

நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து  விஜய் ஆறுதல்..

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் உயிரிழந்ததை அடுத்து நடிகர் விஜய் நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் இரும்பெறும் இமயமாக விளங்கிவரும் அஜித் விஜய்யும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், தொழிலில் கடும் போட்டியாளராக இருந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலை காலமானார். நடிகர் அஜித்துக்கு பல்வேறு நட்சத்திரங்கள் ஆறுதல் கூறி வந்தனர். தற்போது காஷ்மீரில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த நடிகர் விஜய் தற்போது நேரடியாக அஜித்தின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

மேலும் நடிகர் அஜித்திடம் 15 நிமிடம் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.விஜயின் இந்த செயலுக்கு நடிகர் அஜித் ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement

இதேபோன்று நடிகர் அஜித்துக்கு தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆறுதல் கூறியிருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் அஜித்தின் தந்தை உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கு ஆறுதல் கூற விரும்புவதாகவும் நடிகர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று தந்தை சுப்பிரமணியனுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித் தனது தந்தையின் சடலத்தை தூக்கி சென்று கண்கலங்கும் காட்சிகள் அவர்களது ரசிகர்களை உருக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top