Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா21 நாட்கள் ஷூட் செய்த லால் சலாம் காட்சிகள் திருடுப் போனது.. புதுசு புதுசாக காரணம்...

21 நாட்கள் ஷூட் செய்த லால் சலாம் காட்சிகள் திருடுப் போனது.. புதுசு புதுசாக காரணம் சொல்லும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.. !

ரஜினியின் மகள் ஐஷ்வர்யா இயக்கிய லால் சலாம் திரைப்படம் ரீலீசுக்கு முன்பில் இருந்து தற்போது வரை சமூக வலைத்தளத்தில் கேலிப் பொருளாகவே உலா வருகிறது. நெட்டிசன்களுக்கு தொடர்ந்து தீனி போடுவதே ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தான்.

- Advertisement -

இப்படம் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையைப் போற்றும் கருத்துகளைக் கூறும் கதைக் களம் கொண்டது. ஆனால் அதனை நல்ல திரைக்கதையில் சொல்லாததால் மகள் மத்தியில் வரவேற்பு இல்லை. மேலும் இசை வெளியீட்டு விழாவில் தன் தந்தை சங்கி இல்லை என ஐஷ்வர்யா பேசியதைக் அழுத்திப் பேசியதும் இணையத்தில் கலாய்க்கப்பட்டது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படம் எனத் தான் முதலில் இருந்தே இப்படத்திற்கு விளம்பரம் கொடுத்தனர். விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், நிரோஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது இதில் ஹீரோவாகவே ரஜினி நடித்துள்ளார், உண்மையான கவுரவ தோற்றம் விக்ராந்த் தான்.

- Advertisement -

அண்மையில் படத்தின் மோசமான வசூல் குறித்தும் திரைக்கதை குறித்தும் இயக்குனர் ஐஷ்வர்யா நேர்காணலில் பேசினார். அவர் கூறியதாவது, “ சூப்பர்ஸ்டார் வருகையால் தான் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை முதல் பாதியில் கொண்டு வந்தோம். அது செய்வது அவசியம், காரணம் அப்பாவின் பிரபலம். அதற்காக இரு தினங்கள் முன்னர் மொத்த படத்தையும் மறுபடியும் எடிட் செய்தோம். ” என்றார்.

- Advertisement -

படத்தின் திரைக்கதை சரியாக எழுதாதற்கு இப்படியெல்லாம் காரணம் சொல்கிறார் என இதற்கும் இணையத்தில் வைத்துச் செய்தனர். இன்று அதன் தொடர்ச்சியாக ஐஷ்வர்யா, “ 21 நாட்கள் ஷூட் செய்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது. 1000 பேர் சூழ, விறுவிறுப்பான கிரிக்கெட் காட்சிகளைப் படம்பிடித்தோம். ஆனால் அவை துலைந்து போனதால் மனமின்றி இருந்த காட்சிகளை வைத்து எடிட் செய்தோம். ”

“ அவையெல்லாம் இருந்திருந்தால் சொல்ல வந்ததை இன்னும் சிறப்பாகச் சொல்லி இருப்போம். ” எனக் கூறினார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். திரைக்கதை அழுத்தமாக இல்லாததை ஒப்புக் கொள்ளாமல், சற்றும் சம்மந்தமே இல்லாமால் நம்ப முடியாத கட்டுக் கதைகளைக் கூறி மழுப்புகிறார் என சமூக வலைத்தளத்தில் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.

Most Popular