Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா"பிரித்திவிராஜிடம் ஷாலினியை மன்னிப்பு கேட்கச் சொன்ன அஜித்" - இதுதான் காரணமா?

“பிரித்திவிராஜிடம் ஷாலினியை மன்னிப்பு கேட்கச் சொன்ன அஜித்” – இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிருத்விராஜ் . 1979 ஆம் ஆண்டு வெளியான நான் வாழவைப்பேன் என்ற திரைப்படத்தில்  பப்லு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . அன்றிலிருந்து இவர் பப்லு பிரித்திவிராஜ் என்று அழைக்கப்படுகிறார் . பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அஜித் குமார் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில்  வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

மர்மதேசம் அரசி வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும்  தொடர்ந்து நடித்து வந்தவர் இவர் . விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் நடுவனான  சிலம்பரசன் உடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் நினைவிருக்கும் .

தற்போது இவர்  பெசன்ட் நகரில்  பப்ளி டீ ஷாப் என்ற தேநீர் கடையை நடத்தி வருகிறார் . சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் இவர்  தனது திரை வாழ்க்கை பற்றியும் அதில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார் . ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த இவர்  அங்கிருந்த ஹீரோக்களின் அரசியலால் தெலுங்கு சினிமாவை வேண்டாம் என்று சென்னையில் செட்டில் ஆனதாக தெரிவித்துள்ளார் .

- Advertisement -

மேலும் அஜித்குமாரின் மனைவி ஷாலினியுடன் ஆன  ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார் . இரண்டு முறை ஷாலினியை  உணவகத்தில் வைத்து சந்தித்ததாக தெரிவித்திருக்கும் இவர்  இரண்டு முறையும் அவருடன் பேசவில்லை . ஒரு நாள் திடீரென ஷாலினியை இவருக்கு போன் செய்து  உங்களை இரண்டு முறை சந்தித்தும் பேச முடியவில்லை  என்னுடன் நீங்கள் நடிக்காததால் சிறிது தயக்கமாக இருந்தது அதனால் தான் பேசவில்லை என  மன்னிப்பு கேட்டிருக்கிறாராம் . இதற்கு ஏன் சாரி கேட்கிறீர்கள் என இவர் கேட்டதற்கு  நடந்த விஷயத்தை அஜித்திடம் சொன்னேன்  அவர்தான் உங்களிடம் சாரி கேட்கச் சொன்னதாக ஷாலினி தெரிவித்திருக்கிறார் . இந்த விஷயத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்த அவர்  அஜித் ஒரு ஜென்டில்மேன் என தெரிவித்தார் .

- Advertisement -

இவரது சகோதரியும் அஜித் குமாரும் பள்ளி நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . அவள் வருவாளா திரைப்படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக பிரித்விராஜ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது ஹோட்டல் ஜிம் மற்றும் சின்னத்திரை இன பிசியாக இருக்கும் இவர் பெரிய துறை பக்கம் அவ்வளவாக வருவதில்லை . அவள் வருவாளா திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று . ஒரு சைக்கோ தனமான வில்லனாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பிரித்திவிராஜ் . அதன் பிறகு தொடர்ச்சியாக சில காலம் தமிழ் படங்களில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Most Popular