Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாசியான் விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பா.ரஞ்சித் தான் காரணமா? ……… பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட தகவலால்...

சியான் விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பா.ரஞ்சித் தான் காரணமா? ……… பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதன் பிறகு கலைபுலி தானு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார் . அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் வைத்து இவர் இயக்கிய காலா திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .

- Advertisement -

2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விளையாட்டு சம்பந்தமான திரைப்படங்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு முன் மாதிரி திரைப்படமாக அமைந்தது என்றால் அது மறுக்க முடியாத உண்மை . தற்போது இவர் சியான் விக்ரமை வைத்து தங்களான் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் பார்வதி மாளவிகா மோகனன, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரின்ஸ் ஸ்டுடியோ சார்பாக ஞானவேல் ராஜா மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது .

இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முனமாக நடைபெற்று வருகின்றன . இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் தங்கச் சுரங்கத்தில் வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறது . படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில் படத்தின் நாயகன் சியான் விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தினால் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ள சியான் விக்ரம் மருத்துவமனையில் தங்கிப் 15 நாள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின் போது அவருக்கு இந்த விபத்து நேர்ந்ததாகவும் படக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன .

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனை போலவே ஒவ்வொரு காட்சிகளுக்கும் தன் உடலை வருத்தி நடிக்க கூடியவர் விக்ரம் . அதைப் போன்று ஏதேனும் ஒரு காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருதி வந்தனர் . இந்நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விபத்து குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார் . இந்தக் கருத்து தற்போது சமூக ஊடகங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன் விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் பா ரஞ்சித் காரணம் என தனது பேட்டியில் கூறியுள்ளார் . இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் அடிக்கடி சந்தேகங்களை கேட்டு பா ரஞ்சித்தை தொந்தரவு செய்ததால் உதவி இயக்குனர்களை வைத்து படத்தின் காட்சிகளை விளக்குமாறு பா ரஞ்சித் கூறியதாகவும் இதனால் கோபம் அடைந்த விக்ரம் சூட்டிங் இருக்கு வராமல் மீட்க வரையிலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் . இதனை மனதில் வைத்துக்கொண்டு விக்ரமை பழி வாங்குவதற்காக சண்டைக் காட்சிகளின் போது டென்த் மாஸ்டர்களை உசுப்பேற்றி விட்டு விக்ரம் இருக்கு இந்த காயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடமும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . சமீபகாலமாகவே திரைப்பட நடிகைகளை பற்றியும் சினிமா வட்டாரங்களை பற்றியும் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பலரது விமர்சனத்திற்கும் ஆளானவர் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கூறியிருக்கும் இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை .

Most Popular