Friday, May 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசியான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் யார் நடிக்க வேண்டியது தெரியுமா?

சியான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் யார் நடிக்க வேண்டியது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம் . உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு பெயர் போனவர் இவர் . 1990களின் காலகட்டத்திலேயே சினிமா உலகிற்கு அறிமுகமானாலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சேது திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தில் தூள் சாமி என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் . தனது அபாரமான நடிப்பின் மூலம் தேசிய விருதும் பெற்ற நடிகர் சியான் விக்ரம் .

- Advertisement -

தற்போதை இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் நாளை வெளியாக இருக்கிறது . இதனைத் தொடர்ந்து கௌதம் என இயக்கத்தில் இவர் நடித்த துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் மும்பிரைவில் வெளியாக உள்ளது . பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க சுரங்கத்தை மையமாகக் கொண்ட தங்களான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் . இந்தத் திரைப்படத்திற்கான மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது

சமீபகாலமாக விக்ரமின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது . அதனைத் தொடர்ந்து தற்போது தங்களான் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்தைப் பற்றிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது . அந்த செய்தியில் தமிழ் சினிமாவின் தல அஜித் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் விக்ரம் நடித்து அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கிறது . இந்த செய்தி 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோடம்பாக்க வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது .

- Advertisement -

காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சரண் . அந்தத் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார் . அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது அதனைத் தொடர்ந்து சரண் இயக்கத்தில் அஜித் மற்றும் ஷாலினி நடித்த அமர்க்களம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இயக்குனர் சரண் அஜித்திற்கு நெருங்கிய நண்பரும் ஆவார் . இந்நிலையில் அமர்க்களம் திரைப்படத்தை அடுத்து அவர் இயக்க இருந்த ஜெமினி திரைப்படத்திற்கும் அஜித்தை கதாநாயகனாக நடிக்க கேட்டிருக்கிறார் . ஆனால் சில காரணங்களால் அஜித் நடிக்க முடியாமல் போகவே சியான் விக்ரம் ஓ போடு என்று ஸ்டைலாக நடித்த ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

- Advertisement -

Most Popular