சினிமா

“பிரபல மலையாள இயக்குனருடன் கை கோர்க்கிறாரா கார்த்தி”?? – கார்த்தியை சந்தித்த பிரபல மலையாள பட வெற்றி இயக்குனர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு கார்த்தியை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனது முதல் இரண்டு திரைப்படங்களிலேயே மிகப்பெரிய இயக்குனர்களுடன் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவக்கியவர் கார்த்தி. அதனைத் தொடர்ந்து பையா,நான் மகான் அல்ல, கைதி,பொன்னியின் செல்வன் 1, சர்தார் என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

தற்போது கார்த்தி மற்றும் அணு இம்மானுவேல் நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் ராஜமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் புகைப்படங்களில் கழுத்தில் நீண்ட டாலர் அணிந்து வித்தியாசமான ரவுடி கெட்டப்பில் போஸ் கொடுத்திருந்தார் கார்த்தி. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பணத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisement

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி கார்த்தி நடிப்பில் உருவாகி சென்ற வருடம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக பட குழுவினர் அறிவித்தனர். ஜப்பான் படத்தின் சூட்டிங்க்கு பிறகு சர்தார் 2 படத்திற்கான பட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வருடம் மலையாளத்தில் வெளியாகி இளைஞர்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான தள்ளுமல்லா என்ற திரைப்படம் ஆகும். இன்றைய இளைஞர்களின் சமூக வலைதள மோகத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலந்து அருமையாக சொல்லி இருப்பார் டைரக்டர். இத்திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய சினிமா ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரை படத்தை ஹாலித் ரகுமான் என்பவர் இயக்கி இருந்தார்.

Advertisement

இந்நிலையில் தமிழ் சினிமா வட்டாரங்களில் வெளியாகி இருக்கும் புதிய செய்தி நடிகர் கார்த்தியின் ரசிகர்களையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த செய்திகளின்படி நடிகர் கார்த்தியை சந்தித்திருக்கிறார் தள்ளுமல்லா புகழ் இயக்குனர் ஹாலித் ரகுமான். மேலும் அவர் கார்த்திக்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அந்தக் கதை பற்றி கார்த்தி இடம் விவரித்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரின் கூட்டணியிலும் திரைப்படம் வெளியானால் அது நிச்சயமாக கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஒரு படமாக அமையும். இதனால் இந்த திரைப்படத்தில் பற்றிய அறிவிப்பிற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் கார்த்தி ரசிகர்கள் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top