Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentகடும் ஏமாற்றத்தில் சமந்தா காரணம் இதுதானா?

கடும் ஏமாற்றத்தில் சமந்தா காரணம் இதுதானா?

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயக இருப்பவர் சமந்தா. இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் நடித்திருந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் முதலில் வெளியாகிறது. அதில் இவர் நடித்த சிறிய கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேசாவே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சமந்தாவை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது. இந்தத் திரைப்படத்திற்காக 2010 ஆம் ஆண்டின் ஃபிலிம் ஃபேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுநை பெற்றுக் கொண்டார் . அதனைத் தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி நடுநிசி நாய்கள் நான் ஈ நீதானே என் பொன்வசந்தம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

- Advertisement -

சமந்தா தனது முதல் தெலுங்கு படமான ஏ மாயா சேசாவே புகைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவின் மீது காதலில் விழுந்தார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருடங்கள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது கருத்து வேறுபாட்டால் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தனர் .

இதனைத் தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் உடல் கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக உடலை பிட்டாக வைப்பதற்கு கடுமையான உடற்பயிற்சிகள் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் மையோசைட்டிஸ் என்னும் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக சிறிது காலம் நடிப்பு துறையை விட்டு விலகி அமெரிக்கா சென்று அந்த நோய்க்காக மருத்துவ வசதிகளை எடுத்து அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்து தற்போது மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்

- Advertisement -

இவர் மயோசைட்டிஸ் நோயிலிருந்து குணமடைந்த பிறகு வெளிவந்த முதல் திரைப்படம் யசோதா. அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இவரது நடிப்பில் சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் உருவாகியது திரைப்படத்தை சமந்தா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி அவர் மயோசைட்டிஸ் நோயினால் சினிமாவில் விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க உதவும் என மிகவும் நம்பி இருந்தார்.

- Advertisement -

அவற்றிற்கெல்லாம் பேரிடியான செய்தியாக தற்போது சாகுந்தலம் திரைப்படத்தைப் பற்றிய பல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது பிரிமியர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றின் விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் சமந்தாவின் சோகத்திற்கு காரணம். இதனால் இந்த திரைப்படம் வெற்றி பெறாது என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசு்கின்றன. மையோசைட்டிஸ் நோயினால் தான் விட்டு சென்ற இடத்தை பிடிக்கலாம் என்று இருந்த சமந்தாவிற்கு இந்தத் திரைப்படத்திலிருந்து வரும் முதற்கட்ட விமர்சனங்கள் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றன

Most Popular