Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசிம்பு இருக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன்.. மணிரத்னம் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய ஜெயம்...

சிம்பு இருக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன்.. மணிரத்னம் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய ஜெயம் ரவியின் பின்னால் இருக்கும் உண்மையான காரணம்.. !

நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி கைக் கோர்துள்ளது. ‘ தக் லைஃப் ’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் தலைப்பு வீடியோ சில மாதங்கள் முன்பு வெளியானது. முதலில் சமூக வலைத்தளத்தில் என்னடா தலைப்பு என கேலி செய்ய, பிறகு கமல்ஹாசன் அதற்க்கு பின்னால் இருக்கும் காரணத்தைக் கூறினார்.

- Advertisement -

தக் லைஃப் எனும் கும்பலைச் சுற்றி நடக்கும் கதை என்பதால் படத்திற்கு அப்பெயர் இட்டுள்ளனர். பிற படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கமல்ஹாசன் இப்படத்தில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் கமலுடன் இன்னும் சில பெரிய நடிகர்கள் ஒப்பந்தம் ஆகினர். ஆனால் அதில் இருவர் நடையைக் கட்டியுள்ளார்கள்.

துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் இப்படத்தில் இடம்பெற்ற நிலையில் சமீபத்தில் இருவருமே வெவ்வேறு காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர். மற்ற படங்களின் கால்ஷீட் தேதிகளைக் கருதி முதலில் விலகியவர் துல்கர் சல்மான். அவரைக் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகியுள்ளார்.

- Advertisement -

துல்கர் சல்மான் வெளியேறிய பிறகு அவரது இடத்தை நிரப்ப சிலம்பரசனை அணுகியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். அவரும் அதற்க்கு ஒப்புக்கொண்டார். இதன் அறிந்துக் கொண்ட ஜெயம் ரவி நடிகர் சிலம்பரசன் இருக்கும் படத்தின் நான் நடிக்க மாட்டேன் என சற்றும் தயங்காமல் வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இந்த நிகழ்வு இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்திலும் நடந்தது. சிம்பு பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவிருந்தார். ஆனால் படக்குழுவில் ஜெயம் ரவி உட்பட சிலருக்கு பிடிக்காததால் சிம்பு தவிர்க்கப்பட்டார். தற்போது தக் லைஃப் படத்திலும் இத்தகு சூழல் அமைந்துள்ளது.

துல்கர் சல்மானின் இடத்தை நிரப்ப வந்த சிம்புவால், ஜெயம் ரவி படத்தில் இருந்து நகர்ந்துள்ளார். தற்போது ஜெயம் ரவியின் இடத்தை நிரப்ப மணிரத்னம் மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் உள்ளார்.

Most Popular