Friday, May 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா1 ஆண்டாகியும் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் யாஷ்..காரணம் தெரியுமா?

1 ஆண்டாகியும் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் யாஷ்..காரணம் தெரியுமா?

நடிகர் யாஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். ஒரு கன்னட நடிகருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர் நடித்த கே ஜி எஃப் திரைப்படம் தான்.

- Advertisement -

இயக்குனர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப் திரைப்படம் நடிகர் யாசின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படம் சாப்டர் ஒன் சேப்டர் 2 என்று ஏற்கனவே இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு திரைப்படங்களுமே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. கன்னட மொழியில் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என்று பேன் இந்தியன் மொழிகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

வெளியிடப்பட்ட எல்லா மொழிகளிலுமே கே ஜி எஃப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இப்படிப்பட்ட வெற்றி திரைப்படங்களை நடித்த பிறகு எந்த நடிகராக இருந்தாலும் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களை நடித்து ரசிகர்களை குவித்து வருவார்கள்.

- Advertisement -

ஆனால் நடிகர் யாஷ் கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது சாப்ட்டர் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதற்குப் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிப்பது போன்ற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது.

அது பற்றிய கேள்விகளுக்கு தற்பொழுது விடை கிடைத்திருக்கிறது. நடிகர் யாஷ் இயக்குனர் பிரசாந்த் நீளுடன் தான் தன்னுடைய அடுத்த திரைப்படத்தையும் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்பொழுது நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தின் மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் அதனுடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு கே ஜி எஃப் திரைப்படத்தின் மூன்றாவது சாப்ட்டர் இயக்கப்படும் அந்தத் திரைப்படத்தில் நடிகர் யாஷிக் கதாநாயகனாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்திற்கு நடிகர் யாஷை அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் காரணம் பிரசாந்த் நீளுடன் இணைவதற்காக தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து ஞானவேல் என்னும் இயக்குனருடன் ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார்.

அந்தத் திரைப்பட படப்பிடிப்பு முடிந்த பிறகு தற்பொழுது லியோ திரைப்படத்தின் பிசியாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் யாஷ் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Most Popular