சினிமா

லியோ படத்திற்கு பிறகு லோகேஸ் கனகராஜின் மாஸ் அப்டேட்.. அடுத்த படம் என்ன?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி  வரும் படம் லியோ, நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய படமாக லியோ அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் மே அல்லது ஜூன் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பூஜை விடுமுறைகளை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின், அடுத்த படம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. லியோவுக்குப் பிறகு அனைவரும் பெரிதாக எதிர்பார்த்து இருப்பது கைதி படத்தின் இரண்டாவது பாகம் தான். தற்போது லோகேஷ் கனகராஜ் அதனை தான் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். லியோ திரைப்படம் முடிந்தவுடன் நடப்பாண்டில் இறுதியில் கைது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.

ஏற்கனவே விக்ரம் திரைப்படம் கைது படத்தின் தொடர்ச்சியாக அமைந்ததால் தற்போது கைதி கதை எவ்வாறு செல்லும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் lcu புதிய திருப்பத்தை பெரும் என்றும் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் முதல் முறையாக ஒன்றாக இணைந்து நடிக்க வாய்ப்பு ஏற்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

டில்லி உத்திரபிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாக விக்ரம் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது. ரோலக்ஸ் இன் கும்பல் டெல்லியை கொலை செய்ய வரும்போது அதனை எப்படி கார்த்தி முறியடிக்கிறார் என்பது கதையாக இருக்கும். கைதி திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படமும் எல் சி வில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், கைதி படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் லியோ படத்தில் கிளைமாக்ஸ் பிறகு வர வாய்ப்பு இருப்பதாகவும் விக்ரம் டு படத்தில் அவெஞ்சர்ஸ் படத்தில் வருவது போல் அனைத்து நடிகர்களும் ஒன்றிணையலாம் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top