Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை எடுத்த தயாரிப்பாளர் சீரழிந்தாரா? படத்தின் தோல்விக்கு பிறகு உண்மையில் நடந்தது என்ன?...

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை எடுத்த தயாரிப்பாளர் சீரழிந்தாரா? படத்தின் தோல்விக்கு பிறகு உண்மையில் நடந்தது என்ன? – ஓபனாக பேசிய செல்வராகவன்!

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடித்த படம் வெளியானது. மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் எடுக்கும் பணி 2007 இல் தொடங்கி 2008 வரை தொடர்ந்தது. படத்தின் படப்பிடிப்பு சாலக்குடி ,கேரளா ,ஜெய் சல்மார், ராஜஸ்தான், உள்ளிட்ட பகுதிகளில் 2000 எக்ஸ்ட்ராக்களுடன் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

- Advertisement -

மேலும் ஹைதராபாத்தில் உள்ள ‘ராமோஜி ஃபிலிம் செட்டியிலும்’ படம் எடுக்கப்பட்டது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கோலா பாஸ்கர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆல்பம், தனது முந்தைய படங்களுக்கு இசையமைத்த செல்வராகவனின் வழக்கமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்தார். ஒளிப்பதிவு விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றது. ஆனால் இன்று வரை இசையமைப்பாளரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக பாராட்டப்படுகிறது.

- Advertisement -

படத்தின் தயாரிப்பு பணிகள் ஒரு வருடம் வரையிலான வெளியீட்டு தேதிகளை தவிர்த்து ஆயிரத்தில் ஒருவன் தைப்பொங்கல் பண்டிகையில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. விநியோக உரிமையை “ஐங்கரன் இன்டர்நேஷனல்” வாங்கியுள்ளது. படத்தின் நீளம் 3 மணி நேரம் என்றாலும் அது திரையரங்குகளில் ஒரு மணி நேரம் 54 நிமிடங்களாக குறைத்து வெளியிடப்பட்டது. படம் வெளியானதும் பல நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்கிற குறை இன்றளவும் இருக்கிறது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகே பலராலும் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு யூடியூப் சேனலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தினை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு பெரிய பட்ஜெட் படமாக எடுக்க இருந்தோம். ப்ரொடியூசர் 60% மட்டுமே செலவு செய்தார். நான் தான் வட்டிக்கு வாங்கி மற்ற செலவுகளை செய்தேன். அந்த கடனை அடைக்க எனக்கு 15 வருடங்கள் ஆனது. ஏனென்றால் எனக்கு எந்த ஒரு பெரிய பேக்ரவுண்டும் இல்லை எனவும் கூறினார் .

படம் ரிலீஸ் ஆனவுடன் ப்ரொடியூசர் தான் செலவு செய்த பணத்தை எடுத்து விட்டார் ஆனால் நான் கடனாளி ஆனேன். இது ப்ரொடியூசர் கவுன்சிலுக்கும் தெரியும் என்பதையும் கூறினார்.

Most Popular