சினிமா

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த பொன்னியன் செல்வன்..! வீடியோ வெளியீடு

தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது பொன்னியின் செல்வன். தமிழகத்தில் மட்டும் 210 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலக அளவில் 500 கோடி ஈட்டியது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என சில தகவல்கள் வெளியாக்கின. இதற்கு பொன்னியின் செல்வன் திரைப்பட குழு தற்போது அதிகாரப்பூர்வ மறுப்பை வெளியிட்டுள்ள நிலையில் படம் 28ஆம் தேதி ஏப்ரல் மாதம் திரைக்கு கண்டிப்பாக வரும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் பணி இன்று முதல் தொடங்கிவிட்டது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோ வீடியோவில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்று உரையாடுகின்றனர். இதில் நடிகர் கார்த்தியும் ஜெயம் ரவியும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வது போல் வீடியோ இடம்பெற்றுள்ளது.

Advertisement

இதில் பட குழுவினர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் எவ்வாறு இருக்கும். ராஜராஜ சோழன் எவ்வாறு உயிர் பிழைத்தார் என்பது போன்ற கதை அம்சங்கள் இடம்பெறும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று ஏப்ரல் மாதம் முழுவதும் படக்குழுவினரின் கால் சீட்டை வாங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக நடிகர் நடிகைகளை ஈடுபடுத்த உள்ளது. முதல் பாகத்தில் போலவே தற்போது கேரளா ஆந்திரா, டெல்லி மும்பை மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர்.

ஆந்திராவில் பாகுபலி, டிரிபிள் ஆர், கனடாவில் கே ஜி எஃப் உள்ளிட்ட படங்கள் ஆயிரம் கோடி வசூலை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் முதல் ஆயிரம் கோடி வசூலை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top