Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா"சத்யராஜால் விரக்தி அடைந்த எஸ் ஏ சந்திரசேகர்" ….. தளபதி விஜய்க்கு கேட்டதும் உதவிய கேப்டன்...

“சத்யராஜால் விரக்தி அடைந்த எஸ் ஏ சந்திரசேகர்” ….. தளபதி விஜய்க்கு கேட்டதும் உதவிய கேப்டன் விஜயகாந்த்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் . இன்று ரஜினி மற்றும் கமலை விட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார் இவர் தளபதியின் ரசிகர்கள் மற்றும் அவரது பாக்ஸ் ஆபீஸ் மார்க்கெட் கடந்த சில வருடங்களாகவே விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது . அவரது அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . இந்த அளவிற்கு தமிழில் இன்று மிகப்பெரிய வெற்றி ஹீரோவாக வளர்ந்து நிற்கும் விஜய் சினிமா வாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை சந்தித்து தான் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் என்பதால் வாரிசு நடிகர் என்றும் சந்திரசேகர ஆள் தான் இவர் நடிகராக உருவாகினார் என்றும் சினிமாவில் அவரது காலகட்டங்களில் தளபதி விஜயை விமர்சித்து வந்தனர் . துவக்கத்திலும் அவர் தொடர்ச்சியாக தனது தந்தை இயக்கிய படங்களிலேயே அதிகமாக நடித்து வந்தார் . சீமான் விமர்சகர்கள் இப்படி பேசுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது . அதன் பிறகு தான் படிப்படியாக தனது திறமையின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் . தளபதி விஜய் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பூவே உனக்காக .

அதுவரை தந்தையின் பேனரில் நடித்து வந்த விஜய் முதல் முதலாக விக்ரமன் இயக்க சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தார் . மேலும் மிகவும் மாறுபட்ட ஒரு அமைதியான சராசரி இளைஞன் கதாபாத்திரத்திலும் அந்தப் படத்தில் தோன்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வாறு விஜய்யின் வளர்ச்சியில் வந்த திரைப்படம் ஒரு முக்கிய இடம் வைத்தது . மேலும் தளபதி விஜயின் வளர்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என்றால் அது மிகையாகாது . ஆரம்ப காலகட்டங்களில் விஜயின் வளர்ச்சியில் அவரது தந்தை ஏசிய சந்திரசேகர் அதிக கவனம் எடுத்து வந்தார் .

- Advertisement -

விஜய் திரைத்துறையில் பிரபலமா வதற்காக அன்றைய காலகட்டங்களில் முக்கிய ஹீரோக்களாக இருந்தவர்களிடம் விஜய் திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார் . இதற்காக அவர் சத்யராஜிடம் பலமுறை கேட்டும் அவர் ஒரு முறையும் நடிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார் ஆனால் பேதிகள் எதுவும் கொடுக்காமல் நாட்களை மட்டுமே கடத்தி வந்திருக்கிறார் .. இதனால் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் ஷோபா ஆகியோர் மிகப்பெரிய மன வருத்தத்தில் இருந்துள்ளனர் . இந்நிலையில் தான் விஜய்யின் தாயார் ஷோபா எஸ் ஏ சந்திரசேகரிடம் விஜய்காந்தை சந்தித்தால் என்ன என்று தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த்திடையே நல்ல புரிந்துணர்வும் நட்பும் இருந்து வருகிறது . விஜயகாந்தை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர் . தனது மனைவியின் ஆலோசனையின் பேரில் விஜயகாந்தை சந்தித்த எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகனுடன் ஒரு படம் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார் . அதனைத் தொடர்ந்து அவரும் விஜய்யும் இணைந்து நடித்த திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி . அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தளபதி விஜயை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க உதவியது என்றால் அது மிகையாகாது .

Most Popular