Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கதை நல்லா இல்லை.. படம் செய்ய முடியாது என...

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கதை நல்லா இல்லை.. படம் செய்ய முடியாது என வெளியேற்றிய சிவகார்த்திகேயன்.. !

தளபதி விஜய் கோலிவுட்டில் பெரிய சாம்ராஜ்யத்தில் அமர்ந்துள்ளார். அவர் நினைத்தால் தன் மகனுக்கு சுலபமான வழியை வகுக்கலாம். ஆனால் அப்படி இல்லாமால், தன் மகன் ஜேசன் சஞ்சய் தன் சுய உழைப்பால் முன்னேறி வருகிறார்.

- Advertisement -

தன் தந்தை விஜய்யைப் போல ஒரு நடிகராக இல்லாமல் தாத்தா சந்திரசேகர் போலவே இயக்குனர் துறையில் இணைந்துள்ளார். இதற்காக வெளிநாட்டில் பயின்று அங்கு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதனை நிறைவு செய்து கோலிவுட்டுக்கு படங்கள் செய்ய வந்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு லைகா நிறுவனம் தயாரிப்பில் தன் முதல் படத்தை ஒப்பந்தம் செய்தார் ஜேசன் சஞ்சய். இதன் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து படத்தின் மற்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பல்வேறு பிரபல நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவின.

- Advertisement -

அந்தப் பட்டியலில் கவின், அதர்வா, த்ருவ் விக்ரம் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் யாரும் ஜேசன் சஞ்சயிடம் கதைக் கூட கேட்கவில்லை. அனைத்தும் வதந்திகளே. உண்மையிலேயே சஞ்சய் ஒரு பெரிய நடிகரிடம் கதை சொல்லி, அது அவருக்கு திருப்தி இல்லாமல் ரிஜெக்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

துவக்கத்தில் சிறிய பட்ஜெட் படமாக இருந்த ஜேசன் சஞ்சய் படம், நாள் போக்கில் பெரிய தொகை போட வேண்டிய அளவு ஸ்கிரிப்ட் தரம் உயர்ந்தது. அதனால் பெரிய நடிகர் அதில் நடிக்கும் சூழலும் உருவாகியுள்ளது. அதற்காக இயக்குனர் ஜேசன் சஞ்சய் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் சென்று கதையைக் கூறியுள்ளார்.

ஆனால் அவரோ படத்தின் கதையில் தனக்கான கமர்ஷியல் காட்சிகள் இல்லை என்பதால் இது தனக்கான கதை இல்லை எனக் கூறி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக வேறு ஒரு பெரிய நடிகருடன் கதையைக் கூற ஜேசன் சஞ்சய் தயாராகியுள்ளார்.

Most Popular