Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா" மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்ஜே.சூர்யா" ……. மிரட்டலான ஸ்கிரிப்டோடு தொடங்க இருப்பதாக தகவல்!

” மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்ஜே.சூர்யா” ……. மிரட்டலான ஸ்கிரிப்டோடு தொடங்க இருப்பதாக தகவல்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே. சூர்யா . இவர் அஜித் குமார் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி திரைப்படத்தை இயக்கினார். அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது . இந்த இரண்டு வெற்றிகளின் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் எஸ்ஜே.சூர்யா. இதனைத் தொடர்ந்து அவரை இயக்கி நடித்த நியூ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

- Advertisement -

இயக்குனராக தொடர் வெற்றிகளை பெற்றாலும் நடிகனாக வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு நடிகராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் . ஒரு நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் இவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்கள் சுமாரான வரவேற்பையை பெற்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் முக்கியமான ஒன்றாக அமைந்தது

அந்தத் திரைப்படத்தில் எஸ்ஜே.சூர்யாவின் வேறொரு பரிமாண நடிப்பை அனைத்து ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் வெகுவாக பாராட்டினர் . அதனைத் தொடர்ந்து முன்னணியை இயக்குனர்களின் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் புதிய பரிணாமத்தை தொடங்கினார் தீனா முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படத்தின் சைக்கோ தரமான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது . மேலும் தளபதி விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது .

- Advertisement -

மாநாடு திரைப்படத்திலும் ரசிகர்கள் இவரது வில்லத்தனத்தை மிகவும் ரசித்தனர் . சிம்புவும் இவரும் நடிக்கும் நேரடி காட்சிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் . இந்தத் திரைப்படம் தனது சினிமா பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்த்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

- Advertisement -

மேலும் மீண்டும் இயக்குனராக இருப்பதாகவும் அதற்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் . அந்தத் திரைப்படம் உலக அளவில் பேசப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா . தமிழர்கள் உலகில் என்றுமே தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என தெரிவித்த எஸ் ஜே சூர்யா உலக அளவில் பாராட்டப்பட கூடிய ஒரு கதையை தான் தயார் செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கதை சீக்கிரம் படமாக்கப்படும் எனவும் அவர் பேட்டியில் தெரிவித்தார் .

Most Popular