Friday, April 19, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஐயோ சார் எங்கள விட்டுருங்க..! சுந்தர் சியின் விடாத கருப்பு

ஐயோ சார் எங்கள விட்டுருங்க..! சுந்தர் சியின் விடாத கருப்பு

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற திரைப்படத்தை வினய், ஆண்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம் ,கோவை சரளா போன்ற பல நட்சத்திரங்களை வைத்து இயக்கினார்.இந்த திரைப்படத்தில் தானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததை தொடர்ந்து அரண்மனை 2 அரண்மனை 3 என்று அடுத்தடுத்து இந்த திரைப்படத்தின் உடைய அடுத்த பாகங்களை எடுத்தார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அரண்மனை 2 திரைப்படத்தில் திரிஷா ,ஹன்சிகா மோத்வானி, சித்தார்த் ,பூனம் பஜ்வா மேலும் சுந்தர் சி ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

அரண்மனை ஒன்றைப் போலவே அரண்மனை 2 வும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது அதேபோல்
அரண்மனை 3 திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முதன்மை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் ராசி கண்ணா, ஆண்ட்ரியா,  மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார்.

- Advertisement -

முதல் இரண்டு திரைப்படங்களைப் போன்று இந்தத் திரைப்படம் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்படவில்லை. ஆனால் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. ஆனால் இந்த மூன்று திரைப்படங்களுமே வெவ்வேறு கதை கொண்டது. ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத கதையை கொண்டிருக்கும். அதேபோல் தற்பொழுது இந்த திரைப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை தமன்னா, ராசி கண்ணா மற்றும் சந்தானம் ஆகியோர் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு தற்பொழுது தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். வேறு சில திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்தை விட்டு விலகி விட்டார் என்ற தகவலும் வெளிவந்ததை தொடர்ந்து விஜய் சேதுபதியின் அந்த கதாபாத்திரத்தை அரண்மனை நான்காம் பாகத்தில் வேறு எந்த கதாநாயகன் நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இனி எவனும் ஹீரோ இல்லை நானே நடிச்சிக்கிறேன் என்று சுந்தர் சியே நடித்து வருகிறார். இந்த படத்தை ஒரு மாதத்தில் முடிக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார்.

Most Popular