சினிமா

சூர்யாவுக்கு ஜோடியாகும் இளைஞர்களின் கனவு கண்ணி!

ரசிகர்களிடையே சீதா என்று அறிமுகமான சீதா ராமம் படத்தின் கதாநாயகி மிர்னால் தாககூர் தற்போது சூர்யா 42 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 30 வயதான மிர்னால் தாக்கூர் ஹிந்தியில் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். அவரின் குடும்ப பாங்கான உருவத்தைக் கண்டு பாலிவுட்டில் முதலில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

ரித்திக் ரோஷன் படமான சூப்பர் 30-யில் ஹீரோயினாக முதலில் அறிமுகமான மிர்னால் தாக்கூர் ஜெர்சி, டமாக்கா, கோஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டில் வெளியான சீதாராமம்  திரைப்படம் மிர்னால் தாக்கூருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. படம் ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது.

Advertisement

இளைஞர்கள் தேடிய கனவு தேவதையாக மிர்னால் தாக்கூர் வலம் வந்தார். சீதா என்ற பெயரில் ரசிகர்களுக்கு அறிமுகமாகி நமது ஊர் இளைஞர்களை பின்னால் சுற்ற வைத்தார். நமது இளைஞர்கள் செல்போனில் வால்பேப்பர் ஆகவும் இதயத்தின் கனவு கன்னியாகவும் வலம் வந்த மிர்னால் தாக்கூர் தற்போது சூர்யா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்.

சூர்யாவின் 42வது திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

3d தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பட்டாணி ஏற்கனவே ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் வரலாற்று பிளாஷ்பேக் கதைக்கு சூர்யாவுக்கு ஹீரோயின் ஆக நமது மிர்னால் தாக்கூர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த செய்தியை கேட்டதும் தமிழக இளைஞர்கள் மிர்னால் தாக்கூருக்கு சமூக வலைத்தளத்தில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top