Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா17 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் சூர்யா - ஜோதிகா.. இயக்குனர் கூட ரெடி.. !

17 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா.. இயக்குனர் கூட ரெடி.. !

கோலிவுட்டில் கியூட்டான காதல் ஜோடிகளில் ஒன்று தான் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இணைந்து இதுவரை சில்லுனு ஒரு காதன், ஜூன், பேரழகன், உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி என மொத்தம் 7 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.

- Advertisement -

இவர்களது காதல் சினிமாவில் மட்டுமல்ல திரைக்கு வெளியிலும் கூட அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து செயல்பட்ட வீடியோ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. சூர்யா – ஜோதிகா இருகவரும் ஜிம்மில் ஒன்றாக உடற்பயிற்சி வீடியோ கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டது.

அதற்க்கு பின்னால் இருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அது என்னவென்றால் சுமார் 17 ஆண்டுகள் கழித்து இருவரும் சினிமாவில் இணைந்து நடிக்கப்போகிறார்களாம். படத்தை 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனராக வாய்ப்புக் கொடுக்க ஒருவரை இப்போதைக்கு தேர்ந்தெடுத்துள்ளது இந்த ஜோடி.

- Advertisement -

முதலில் சில்லுக் கருப்பட்டி & ஏலே ஆகியப் படத்தை இயக்கிய ஹலித்தா ஷலீம். இரண்டாவதாக, பெங்களூர் நாட்கள் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன். இந்த இருவர்களில் எதாவது ஒரு இயக்குனரின் கீழ் சூர்யா – ஜோதிகா ஜோடி நடிக்கவுள்ளார்கள். மக்கள் மத்தியில் இந்த ஜோடி நல்ல வரவேற்பையும் விண்டேஜ் நினைவுகளையும் அதுக் கொடுக்கும்.

- Advertisement -

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஜோதிகாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சூர்யாவுக்கு வாடிவாசல், புறநானூறு, ரோலக்ஸ் என மாற்றப் படங்களும் உள்ளது. ஆனால் அவை துவங்குவதற்கு 2½ – 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் சூர்யா இந்தப் படத்துக்கு செல்வார்.

மறுபக்கம் ஜோதிகா அவ்வப்போது நல்ல ஸ்கிரிப்ட் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். 17 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி திரையில் இணைவது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular