Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய்க்கு வைத்திருந்த கதையை தன்வசம் படுத்திய சூர்யா.. இதற்காக பாவம் அயலான் இயக்குனரை நம்ப வைத்து...

விஜய்க்கு வைத்திருந்த கதையை தன்வசம் படுத்திய சூர்யா.. இதற்காக பாவம் அயலான் இயக்குனரை நம்ப வைத்து ஏமாற்றினார்.. !

நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெளியானது. சினிமா நிருபர்கள் வட்டாரங்களில் கூட முன்னரே செய்திகள் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் சூர்யாவே ஒரு வாரத்துக்கு முன்பு தான் ஸ்கிரிப்ட்டை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கடந்த இரு ஆண்டுகளாக ஷூட்டிங்கில் உள்ளது. இறுதிக் கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக பணி செய்தும் வருகிறது. மறுபக்கம் சூர்யா தன் அடுத்தப் பட வேலைகளைப் பார்க்கத் துவங்கியுள்ளார்.

பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தை செய்யவிருந்து பிறகு அதில் இருந்து விலகினார். அதே போல வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்காராவின் புறநானூறு என மொத்தம் மூன்று படங்கள் ஒப்பந்தமிட்டு கைவிடபட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் ஒதுக்கிவிட்டு இரு தினங்களுக்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுடன் அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார்.

- Advertisement -

சூர்யா கங்குவா படத்திற்குப் பிறகு ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன்னரே கதை சொல்லி உறுதி செய்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு திரைக்கதையை மீண்டும் பார்த்துவிட்டு விருப்பமில்லை என சூர்யா அவரை ஒதுக்கினார். அயலான் இயக்குனர் ரவிக்குமாரும் நான்கு வருடங்கள் காத்திருப்பு வீணாக போனது என வருத்தத்தில் நடையைக் கட்டினார்.

- Advertisement -

இப்போது விரைந்து அடுத்தப் படத்தை அறிவித்து பணிகளைத் துவங்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு, எந்த இயக்குனரிடம் முழுமையான ஸ்கிரிப்ட் உள்ளது எனத் தேடி அவருடன் அடுத்தப் படத்தில் பயணிக்க முடிவு செய்தார் சூர்யா. அப்படி சூர்யாவிடம் வந்த சேர்ந்தவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இந்தக் காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவிடம் கூறியக் கதையும் சில மாதங்களுக்கு முன்னர் விஜய்யிடம் சொன்னக் கதையும் ஒன்று தானாம். தளபதி 69 படத்திற்காக விஜய் சில பெரிய இயக்குனர்களிடம் கதைக் கேட்டார், அதில் ஒன்று தான் கார்த்திக் சுப்புராஜ். தற்போது விஜய் இயக்குனர் ஹெச்.வினோத் அவர்களுடன் தன் கடைசிப் படத்தை செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதனால் கார்த்திக் சுப்புராஜ் விஜய்க்கு வைத்திருந்த கதையில் தற்போது சூர்யா நடிக்கவுள்ளார்.

Most Popular