Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாவருஷத்துல ஒரு நாள் சீன் போட்டுட்டு ஒதுங்கி போறவன் நான் இல்ல … விஜய்க்கு போட்டியாக...

வருஷத்துல ஒரு நாள் சீன் போட்டுட்டு ஒதுங்கி போறவன் நான் இல்ல … விஜய்க்கு போட்டியாக சூர்யாவின் சைலன்ட் ஆன சம்பவம் – வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ரசிகர்களாலும் சினிமா விமர்சகர்களாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக பார்க்கப்படும் இவர் தற்போது இல்லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ரஜினி மற்றும் கமலை விட அதிக சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன . மேலும் அரசியலில் அவர் களமிறங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது . இதற்காகவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக சில ஆண்டுகளுக்கு முன் மாற்றியமைத்தார் விஜய் . தற்போது அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சி மாவட்டத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு நிலை வருகிறது .

- Advertisement -

முன்னதாக தனது மக்கள் இயக்கத்தின் மூலம் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் . மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் ஒருவேளை உணவு வழங்கினார் . இது போன்ற நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை குறி வைத்து விஜய் காய் நகர்த்துகிறாரா என்ற எண்ணம் ரசிகர்களிடம் சினிமா விமர்சனகளிடமும் தோணாமல் இல்லை . கடந்த மே மாதம் நடைபெற்ற பொது தேர்வை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் விஜய் .

அந்த அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்டம் தோறும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் தகவல்களை சேகரிக்குமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கட்டளை பிறப்பித்து இருந்தார் . கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தகவல்களின் அடிப்படையில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை விஜயை நேரில் நின்று நடத்தினார் . இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மேடையில் இருந்து பரிசுகளை வழங்கி அவர்களை வாழ்த்தி பேசினார் . இதற்காக 13 மணி நேரத்திற்கு மேல் அவர் மேடையில் நின்றதாக ரசிகர்கள் பாராட்டினர் . இது விஜயின் அரசியலுக்கான ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் மக்களிடம் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கல்விக்கான ஆர்வத்தை மக்களிடம் ஊட்டும் வகையில் அமைந்ததாகவும் பலரும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் .

- Advertisement -

விஜய் மேடை போட்டு பிரம்மாண்டமாக செய்த விஷயத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் விஜயின் நண்பருமான சூர்யா பல ஆண்டுகளாக எந்தவித விளம்பரமும் இன்றி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தமிழகமெங்கும் இருக்கும் பல லட்சக்கணக்கான ஏழை மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி பெற உதவி செய்து வருகிறார் மேலும் மாணவர்களிடம் படிப்பு பற்றிய ஆர்வத்தையும் அகரம் அறக்கட்டளை மூலமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்த அகரம் பவுண்டேசன் மூலம் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கல்வி பெற்று பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து விஜய் பிரம்மாண்டமாக விழா எடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய அகரம் ஃபவுண்டேஷனில் மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடி இருக்கிறார் . ஆனால் இவரது சந்திப்பு பற்றி எந்த விளம்பரமும் இல்லை . இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . வருடம் முழுவதும் மாணவ மாணவிகளை படிக்க வைப்பவர்களுக்கு விளம்பரம் எதுவும் தேவையில்லை என சூர்யாவின் ரசிகர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது

Most Popular